மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 October, 2021 6:51 AM IST
Azolla controls weeds in Paddy

நெற்பயிருடன் சேர்த்து அசோலா (Azolla) வளர்ப்பதால் நெல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் களைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. நெற்பயிருடன் அதிகமாக குதிரைவாலி, வாசனாம்புல், மயில்கொன்றை மற்றும் அருகம்புல் வகை களை நிறைந்திருக்கும். கோரைவகை களைகளும், அம்மான் பச்சரிசி, வல்லாரை, நீர்மேல்நெருப்பு, கரிசிலாங்கண்ணி, நீர் புல், வழுக்கை புல் போன்ற அகன்ற இலைக் களைகளும் அதிகமாக வளரும்.

நாற்றங்காலில் களை நிர்வாகம்

நாற்றங்காலில் நெல் விதைத்த மூன்றாம் அல்லது நான்காம் நாளில் சிறிய அளவில் தண்ணீர் தேங்கியிருக்கும். களை முளைப்பதற்கு முன்பாக பிரிடில்லாகுளோர் சாட்னர் களைக்கொல்லியை எக்டேருக்கு 0.3 கிலோ தெளிக்க வேண்டும். நட்ட 8ம் நாள் எக்டேருக்கு 2 லிட்டர் பூட்டாகுளோர் அல்லது 2.5 லிட்டர் பென்டிமெத்தலினை 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

இயந்திரக்களையெடுத்தல்

நடவு செய்தபின் 15 மற்றும் 25ம் நாளில் உருளைச் சக்கர களை (Weeds) எடுப்பான் மூலம் களைகளை அகற்றலாம். இதன் மூலம் வேர்ப்பகுதிக்கு ஆக்சிஜன் கிடைப்பதுடன் மகசூலும் அதிகரிக்கும். களை எடுக்கும் உள்ளீடு செலவும் குறையும். 

நடவு செய்த 3ம் நாள் எக்டேருக்கு 750 - 1000 கிராம் பென்டிமெத்தலின் தெளிப்பதன் மூலம் புல்வகை, அகன்ற இலை களைகளை கட்டுப்படுத்தலாம். விதைத்த 5 ம் நாள் அல்லது நடவு செய்த 10 ம் நாளில் iஎக்டேருக்கு 25 கிராம் பைரசோசல்பியூரான் தெளித்தால் கோரை மற்றும் அகன்ற இலை களைகளை கட்டுப்படுத்தலாம்.

நடவு செய்த 20 - 25 ம் நாளில் எக்டேருக்கு 2, 4 - டி.இ.இ. 750 - 1000 கிராம் தெளித்தால் கோரை மற்றும் அகன்ற இலை களைகளை கட்டுப்படுத்தலாம்.

முரளி அர்த்தனாரி
இணைப்பேராசிரியர்
சஞ்சீவன்,
உழவியல் இளநிலை ஆராய்ச்சியாளர் வேளாண்மைப் பல்கலை
கோவை.
0422 -661 1246

மேலும் படிக்க

கலப்படமில்லாத உணவே விவசாயிகளின் சாதனை: அசத்திய ராம்குமார்!

English Summary: Azolla controls weeds by increasing the growth of paddy!
Published on: 03 October 2021, 06:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now