நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 September, 2020 6:57 PM IST

நெல் பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி அறிவுரை வழங்கியுள்ளார்.

நெல் பயிரில் இலைக்கருகல் நோய்

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் சுமார் 10,000 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

 தற்போது, நிலவும் சீதோஷ்ண நிலையில் நெல் பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோயின் தாக்குதல் பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது.

இவை, இலைப்பரப்பின் மீது நீரில் நனைத்தது போன்று மஞ்சள் நிற வரிகளுடன் காணப்படும். இலைகளின் ஓரங்களில் மஞ்சள் கலந்த வெண்மை அல்லது மஞ்சள் நிறத்தில் நீளவாக்கில் பாதிப்பு காணப்படும். நுனியிலிருந்து இலைகள் காய்ந்தும், சுருண்டும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • இவ்வாறு இருந்தால், விவசாயிகள் 3 சதவீத வேப்ப எண்ணெய் அல்லது 5 சதவீத வேப்பங்கொட்டையிலிருந்து எடுத்த சாற்றைத் தெளிக்க வேண்டும்.

  • ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்லின் கலவை 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்சிகுளோரைடு 1.25 கிலோ என ஹெக்டேருக்கு கலந்து தெளிக்க வேண்டும்.

  • நோயின் தீவிரம் அதிகம் காணப்பட்டால் 15 நாள்கள் இடைவெளியில் மறுமுறையும் மேற்கண்ட மருந்துகளைத் தெளித்தால், இந்த பாக்டீரியல் இலைக்கருகல் நோயின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க...

விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள விதைப் பரிசோதனை அவசியம் - வேளாண் துறை

PM- KISAN மோசடி: ரூ.110 கோடி வரை முறைகேடு, 18 பேர் கைது - ககன்தீப்சிங் பேடி!வரும்

நாட்களில் காய்கறி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு!பால்

English Summary: Bacterial Leaf Disease in Paddy Crop and its Control Measures
Published on: 09 September 2020, 06:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now