Farm Info

Friday, 31 December 2021 07:19 PM , by: R. Balakrishnan

Drip irrigation

சொட்டுநீர் பாசனத்தில் பயிருக்கு தேவையான உரங்களையும் தண்ணீரோடு கலந்து பயிருக்கு அருகில் சமச்சீராக அளிக்கும் முறையே சொட்டு இடுவதால் பயிருக்கு 50 சதவீத சத்துக்களே கிடைக்கிறது. மீதமுள்ள 50 சதவீத சத்துக்கள் வீணாகிறது. சொட்டுநீர் உரப்பாசனத்தில் திரவ உரங்கள் அல்லது நீரில் முற்றிலும் நீர் உரப்பாசனம். சாதாரணமாக உரங்களை மண்ணில் கரையும் உரங்களை அளிப்பதால் உரத்தின் பயன் 80 - 90 சதவீதம் அதிகரிக்கிறது.

சொட்டுநீர் உரப்பாசனம் (Drip - Compost Irrigation)

தாவர சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுவதுடன் பயிரின் மகசூலும் மேம்படுத்தப்படுகிறது. நீரும் உரமும் செடிகளின் வேர் பாகத்தை நேரடியாக சென்றடைவதால் சத்துக்கள் எளிதாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பயிருக்கு தேவைப்படும் நீரையும் உரத்தையும் துல்லியமாக கணக்கிட முடியும்.

விதைக்கும் பொது அதிக மணிச்சத்து, வளர்ச்சிப் பருவங்களில் தழை மற்றும் சாம்பல் சத்து, முதிர்ச்சி பருவத்தில் கூடுதல் சாம்பல் சத்துக்களை தேவைக்கேற்ப தேர்வு செய்து குறைந்தளவில் சிக்கனமாக வழங்கலாம். நுண்ணுாட்டச் சத்துக்களை திறம்பட அளிக்க முடியும். திராட்சை, வாழை, பழ வகை, காய்கறி பயிர்களில் சாம்பல் சத்து அதிகம் கொண்ட உரங்களை தேர்வு செய்து அளிப்பதால் தரத்தை மேம்படுத்தி கூடுதல் லாபம் பெறலாம்.

உரத்தின் தேவை 25 சதவீதம் வரை குறைக்கலாம். இந்த முறையில் நீர் சேமிப்பு, நேரம், ஆட்செலவு அனைத்தையும் மிச்சப்படுத்தலாம்.

திரவ வடிவம் (Liquid Type)

யூரியா, பொட்டாஷ் உரங்கள் எளிதில் கரையும். தழை, சாம்பல் சத்துக்கு இவற்றை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்தக்கூடாது. இதற்கு மாற்றாக பாஸ்பாரிக் அமிலம் திரவ வடிவில் பயன்படுத்தலாம்.

- இளையராஜன்
இணைப்பேராசிரியர், மண்ணியல் துறை
பன்னீர்செல்வம்,
இயக்குனர் நீர் நுட்ப மையம்,
வேளாண்மை பல்கலை, கோவை
94436 73254

மேலும் படிக்க

தமிழக காய்கறிகள் நேரடி கொள்முதல்: கேரள அரசு புதிய திட்டம்!

விவசாயிகளுடன் சேர்ந்து மிளகாய் நாற்று நட்ட மாவட்ட ஆட்சியர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)