மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 July, 2021 8:18 PM IST
Credit : Dinamalar

வாழை சாகுபடியில் அதிக மகுசூல் (High Yield) பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இந்த வழிமுறைகளைப் பின்பற்றனால், நிச்சயமாக விவசாயிகள் அதிக மகசூலை பெற முடியும்.

நுண்ணூட்டச் சத்துக்கள்

ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் வாழை சாகுபடி (Banana Cultivation) சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாழை பயிர் பொதுவாக அதிக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவையுள்ள பயிராகும். ஆனால், நடைமுைறயில் முக்கிய சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நுண்ணூட்ட சத்துக்களுக்கு கொடுப்பதில்லை.

இதனால் தேைவயான அளவு உரம் இட்ட தோட்டங்களில் கூட மரங்களின் வளர்ச்சி குன்றி மகசூல் குறைவதுடன், தரக் குறைபாடு ஏற்படுவதுண்டு. எனவே இந்த குறைபாடுகளை களைய முக்கிய சத்துக்களுடன் நுண்ணூட்டச் சத்துக்களை கலந்து உரிய விகிதத்தில் கொடுப்பதன் மூலம் வாழை தார்களின் தரத்தை மேம்படுத்தலாம்.

பனானா சக்தி

தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியின் கண்டுபிடிப்பான “பனானா சக்தி (Banana Sakthi)" என பெயரிடப்பட்டுள்ள நுண்ணூட்டச் சத்துக் கலவையை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் கலந்து வடிகட்டி அதனுடன் ஒட்டும் திரவம் கலந்து வாழை கன்று நட்ட 3,4,5,6 மற்றும் 7-ம் மாதங்களில் இலைகளில் நன்கு நனையும் படி தெளிப்பதன் மூலம் வாழை கன்றின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் இந்த நுண்ணூட்ட கலவையை அளிப்பதனால் அதிக எண்ணிக்கையில் சீப்புகளும், காய்களும் எவ்வித வெடிப்பும் இன்றி நல்ல தரத்துடன் பெறமுடியும்.

கூடுதலாக, ஐந்தாம் மாதத்தில் மரத்திற்கு 20 கிராம் என்ற அளவில் பென்டொனைட் சல்பர் உரத்தை மற்ற உரங்களுடன் சேர்த்து கொடுப்பதாலும் வாழை தார்களின் தரத்தை உயர்த்தலாம்.

மானியம்

தரமான தார்களை பெற உறை இடுவதும் கூடுதல் பயன் அளிக்கும். விவசாயிகளுக்கு வாழை தார்களுக்கு உறைகள் வாங்கிட 50 சதவீதம் மானியத்தில் (Subsidy) ஒரு எக்டருக்கு ரூ. 12,500 வழங்கப்படுகிறது.

தொடர்புக்கு

மேலும், கூடுதல் தகவலுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை 04652-275800 என்ற தொலைப்பேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

மேலும் படிக்க

121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!

மண் வளத்தை மேம்படுத்தும் புதிய மண் நுண்ணுயிரி நீலகிரியில் கண்டுபிடிப்பு!

English Summary: Best Ways to Get Higher Yield in Banana Cultivation: Agriculture Officer Description!
Published on: 06 July 2021, 08:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now