மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 September, 2021 11:28 AM IST

பயிரிடப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றுக்குப் பயிர்க்காப்பீடு செய்யுமாறு மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காப்பீடு திட்டம் (Insurance plan)

வேளாண்மைத்துறை மூலம் திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடப்பு 2021-22ம் ஆண்டு சிறப்பு பருவத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல் II சம்பா மற்றும் பிர்க்கா அளவில் மக்காச்சோளம் II, பருத்தி II ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

யார் பயனாளிகள் (Who are the beneficiaries)

அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அறிவிக்கை செய்யப் பட்டப் பயிர்களைப் பயிரிடும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் இந்தத் திட்டத்தில் சேர தகுதிபெற்றவர்கள். 

வங்கிகளில் காப்பீடு (Insurance in banks)

பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் அவரது சுய விருப்பத்தின் (Voluntary Scheme) அடிப்படையில் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்.

பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம்.
விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்திற்கும். அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பு போன்ற இனங்களில் பயிர் காப்பீடு வழங்கப்படும்.

ஒரேவிதமான பிரிமியம் (Uniform premium)

கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே விதமான பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

மேலும், விவசாயிகள் சிறப்புப் பருவத்தில் சாகுபடி காலம் நெல் 11 01.08.2021 to 15.11.2021, மக்காச்சோளம் 11 - 01:10.2021 16.12.2021, பருத்தி 11 - 01.10.2021 to 15.12.202) சாகுபடி செய்தவர்கள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்கள், தேசிய வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்(Documents required)

  • விவசாயிகளின் முன்மொழிவு படிவம்

  • பதிவு விண்ணப்பப் படிவம்

  • கிராம நிர்வாக அதிகாரியிடம் அடங்கல்

  • வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல்

  • ஆதார் அட்டை நகல்

மேலேக் கூறியுள்ள இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப் பிக்கும் போது பிரிமியத் தொகையும் உரிய தேதிக்குள் செலுத்த வேண்டும்.

பிரிமியத் தொகை (Premium amount)

நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.488.25ம், மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ. 371.25 ம், பருத்திக்கு ஏக்கருக்கு ரூ.381.59ம் பிரிமியத் தொகையாக செலுத்த வேண்டும். நெல்லுக்கு 15.11.21ம், மக்காச்சோளத்திற்கு 15.12.21ம், பருத்திக்கு 15.12.21ம் காப்பீடு செய்யக் கடைசித்தேதியாகும்.

வேளாண் துறை அறிவுறுத்தல் (Department of Agriculture Instruction)

பதிவு செய்ததற்கான ஒப்புகைச்சீட்டில் விவசாயிகள் தங்களின் நெல் பயிர் சாகுபடி, வருவாய் கிராமம், சர்வே எண் பயிர் சாகுபடி பரப்பு, வங்கி கணக்கு விவரங்கள் சரியாக பதிவு செய்யப் பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எனவே, விவசாயிகள் RPMFBY திட்டத்தின்கீழ் நெல் II. மக்காச்சோளம்II, பருத்திII சிறப்பு பருவத்திற்கு உரியத் தேதிக்குள் பதிவு செய்யுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தகவல்
மாவட்ட ஆட்சியர்
மதுரை

மேலும் படிக்க...

நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!

சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி!

English Summary: Call for paddy, maize, cotton-crop insurance!
Published on: 18 September 2021, 10:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now