நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 January, 2021 9:53 AM IST
Credit : The Financial Express

வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க முன்வராததால், 9ம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

தொடரும் போராட்டம் (Protest Continue)

புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் டெல்லியிலும், டெல்லியின் எல்லைப் பகுதிகளிலும் நடத்தி வரும் போராட்டம் 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது

2 விவகாரங்களுக்கு தீர்வு (Solution to 2 issues)

இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்கனவே மத்திய அரசு 8 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மின்கட்டண விவகாரம். வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டது.

இருப்பினும், முக்கிய கோரிக்கைகளான வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகியவற்றில் மத்திய அரசு பிடிகொடுக்காமல் இருந்து வருகிறது. இதனால் 7 மற்றும் 8 ம் கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு(Case in the Supreme Court)

இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த 11-ந் தேதி அதிரடியாகத் தடை விதித்தது. அத்துடன், விவசாயிகளுடன் பேச்சு நடத்தி அறிக்கை அளிப்பதற்காக 4 உறுப்பினர் குழுவையும் அமைத்தது.

9ம் கட்டப் பேச்சு(9th Phase Talk)

இந்த நிலையில், மத்தியஅரசுக்கும், விவசாயிகள் அமைப்புகளுக்கும் இடையான 9-வது கட்டப் பேச்சுவார்த்தை டெல்லி விஞ்ஞான பவனில் நேற்று திட்டமிட்டபடி நடந்தது. இதில் மத்திய அரசின் சார்பில் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விவசாயிகள் தரப்பில் 40 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

குமார் 5 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், விவசாயிகள் தரப்பில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அரசாங்கம் தரப்பில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது, தேவையான மாற்றங்களைச் செய்ய தயார் என உறுதி அளிக்கப்பட்டது.

இருவரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிந்தது. இருந்தபோதிலும், இரு தரப்பினரும் வரும் 19-ந் தேதி மதியம் 12 மணிக்கு மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனால், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

மேலும் படிக்க...

வேளாண் பொறியியல் கருவிகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு என்ன வாடகை? முழு விபரம் உள்ளே!

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் - விவசாயிகள் கவனத்திற்கு!

பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!

English Summary: Central government's 9th phase of talks with farmers failed!
Published on: 16 January 2021, 09:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now