Farm Info

Monday, 08 November 2021 08:01 AM , by: Elavarse Sivakumar

வங்க கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை உருவாக உள்ளநிலையில், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை (Heavy rain) பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதி கனமழை (Very Heavy rain)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 11-ந் தேதி வரை அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

08.11.2021

மிக கனமழை (Very heavy rain)

அதன்படி, வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

கனமழை (Heavy rain)

புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தாழ்வுப் பகுதி

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், இது மேலும் வலுப்பெற்று வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

அரபிக்கடல் பகுதிகள்

08.11.2021

மத்தியக்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்க கடல் பகுதிகள்

08.11.2021

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரக் கடலோர பகுதிகள், வடத் தமிழகக் கடலோரப் பகுதிகளில் குறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே நேரத்தில் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 9-ம் தேதிக்குள் கரைக்குத் திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தீவாக மாறியச் சென்னை

இதனிடையே சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை தண்ணீர் தீவாக மாறிக் காட்சியளிக்கிறது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

2 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - இந்த 4 மாவட்டங்களில்!

4 நாட்களுக்கு மிக கனமழை - சென்னைக்கு ரெட் அலேர்ட்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)