Farm Info

Tuesday, 30 November 2021 08:12 AM , by: Elavarse Sivakumar

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடரும் கனமழை

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வானப் பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த சில மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

கனமழை (Heavy rain)

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்திற்கு  கனமழை பெய்யலாம்.

மிதமான மழை (Moderate rain)

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்திலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தேனி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதேபோல், புதுச்சேரியிலும் அடுத்த 2 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு (Depression)

மேலும், அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விடுமுறை (Holidays)

தொடர் மழையால் நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திண்டுக்கல், கடலூர், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க...

4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

உருவாகிறது 4-வது புயல் சின்னம் - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)