Farm Info

Sunday, 01 May 2022 09:20 PM , by: Elavarse Sivakumar

வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் பொதுமக்கள் தன்னுடைய தோட்டத்திற்கு வந்து இலவசமாக வெங்காயத்தை எடுத்துச் செல்லலாம் என விவசாயி ஒருவர் அறிவித்திருப்பது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2 மாதங்களாக வெங்காயம் அமோக விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும், ஒரு கிலோ வெங்காயம் அதிகபட்சமாக 10ரூபாய்க்கும் குறைவாகவேக் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விரக்தியில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், வெங்காயத்தை இலவசமாக விற்பனை செய்ய முன்வந்திருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம் பனப்பட்டியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் சாகுபடி செய்திருந்தார். தற்போது வெங்காயம் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், அறுவடை செய்வதற்கான ஆட்கள் கூலி, சந்தைக்கு கொண்டு செல்வதற்கு ஆகும் போக்குவரத்து செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது.

இதனால் பொதுமக்கள் தனது தோட்டத்திற்கு வந்து வெங்காயத்தை இலவசமாக எடுத்து செல்லுங்கள் என அதிருப்தியுடன் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் பேசிய சிவராஜ், ‘வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், இப்போது அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு சென்றால் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.

எனவே, இலவசமாக கொடுத்தால் மக்களாவது நினைத்து பார்ப்பார்கள், எடுத்து செல்லட்டும்’ என்றார். இவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேநேரத்தில் வெங்காயத்திற்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க...

படுக்கைக்குச் செல்லும்முன்பு 3 ஏலக்காய்- எத்தனை நன்மைகள்!

எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)