அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 June, 2022 9:24 PM IST
Coconut fibrr fertilizer

விவசாயத்தில் விளைச்சலை அதிகரிப்பது மட்டும் இலாபம் தந்து விடாது. சிலநேரங்களில் விளை பொருட்களின் விலை குறைந்து விட்டால், விளைச்சல் அதிகமாக இருந்தாலும் நட்டமே ஏற்படும். இதனை சமாளிக்க மாற்று வழியினை விவசாயிகள் கையில் எடுத்தே ஆக வேண்டும். அந்த மாற்று வழிதான் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது. எந்த ஒரு விளைபொருளையும் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதனால், விவசாயிகளுக்கு இலாபம் பன்மடங்கு அதிகரிக்கும்.

தென்னை நார்க் கழிவு (Coconut Fiber Waste)

தென்னை மரங்களில் இருந்து பெறப்படும் தேங்காயை விற்பனை செய்த பிறகு, அதிலிருந்து கிடைக்கும் இழிவான தேங்காய் நாரை மதிப்புக் கூட்டினால், தென்னை விவசாயிகள் இன்னும் இலாபம் பெறலாம் என்பது, வேளாண்மையில் முன் அனுபவம் பெற்றவர்களின் கருத்து. தென்னை நார்க் கழிவிலிருந்து உரம் தயாரித்தால், விவசாயத்திற்கு உபயோகமாக இருக்கும். மேலும், இதனை இயற்கை உரமாக மற்ற விவசாயிகளுக்கும் விற்பனை செய்யலாம்.

உரம் தயாரிப்பு (Compost preparation)

தென்னந்தோப்பில், தென்னை மட்டை மற்றும் தென்னை ஓலை ஆகிய கழிவுகள் அதிகமாக சேரும். இந்தக் கழிவுகளை தூள் தூளாக மாற்றி, சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். மொத்தமாக 1,000 கிலோ தென்னை நார்க் கழிவு சேர்ந்ததும், அதனுடன் ஐந்து பாட்டில் புளுரோட்டாஸ் மற்றும் ஐந்து கிலோ யூரியா கலவையை சேர்த்து கலக்கினால், தென்னை நார் உரம் கிடைத்து விடும்.

முதலில், 100 கிலோ தென்னை நார்க் கழிவை தரையில் கொட்டி பரப்பி விட வேண்டும். இதன் மீது ஒரு பாட்டில் புளுரோட்டாஸை தெளிக்க வேண்டும். பின்னர் மீண்டும், 100 கிலோ தென்னை நார் கழிவைக் கொட்டி வைத்து, 1 கிலோ அளவு யூரியாவை தூவி விட வேண்டும். இதைப்போலவே, புளுரோட்டாஸ், தென்னை நார் கழிவு மற்றும் யூரியா என பத்து அடுக்குகளில் உரப் படுக்கை தயார் செய்ய வேண்டும்.

கூடுதல் வருமானம் (Extra Income)

தினந்தோறும், லேசான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்வதற்கு, தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு மாத காலத்திற்குப் பிறகு, மேல் உரம் கீழ் உரமாகவும், கீழ் உரம் மேல் உரமாகவும் கிளறி விட வேண்டும். இப்படிச் செய்தால், தரமான தென்னை நார் உரம் தயாராகி விடும். இந்த தென்னை நார் உரத்தை வயல்களுக்கு செலுத்தும் போது, நிலத்திற்கு தேவையான அனைத்து வித சத்துகளும் கிடைக்கும்.

எந்தப் பயிரைச் சாகுபடி செய்தாலும், இந்த தென்னை நார் உரத்தைப் பயன்படுத்தினால் கூடுதல் மகசூலைப் பெற முடியும். தென்னை நார் உரத்தை மற்ற விவசாயிகளுக்கும் விற்பனை செய்யும் பட்சத்தில், கூடுதல் வருமானம் பெறும் மாற்று வழியாக இது அமையும்.

மேலும் படிக்க

மண்வளம் காக்க தென்னை நாரில் கிப்ட் பேக்: மாற்றத்துக்கான வழி!

இ-நாம் வழியாக பருத்தி ஏலம்: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

English Summary: Coconut fibrr Waste Fertilizer: Income If You Change It!
Published on: 07 June 2022, 09:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now