மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 January, 2021 7:56 AM IST
Credit : Daily hunt

தஞ்சை மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துமாறு, அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பனிக்கு பெயர் பெற்றது (Famous for snow)

பொதுவாக மார்கழி மாதத்தில் வீசும் கடும்பனியே பெயர் பெற்றது. ஆனால் இந்த இயற்கை விதிக்கு மாறாக, இம்முறை பருவம் தவறி மழை பெய்துள்ளது.

மூழ்கிய பயிர்கள் (Submerged crops)

இதனால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள மாங்குடி பொண்டரிகபுரம்,
திருவிடைமருதூர் அருகேயுள்ள முத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, பல ஏக்கர் பரப்பிலான நெய்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

அவ்வாறு பாதிக்கப்பட்டப் பகுதிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், அப்போது, இம்மாவட்டத்தில் புரெவி
புயல் காரணமாக 8.500 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

10 மடங்கு மழை(10 Fold rain)

மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் சராசரியாக 10 மி.மீ.தான் மழை கிடைக்கும். ஆனால், நிகழாண்டு ஜனவரியில் இதுவரை 100 மி.மீ.-க்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. சில வட்டாரங்களில் 150 முதல் 160 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

குறிப்பாக திருப்பனந்தாள், திருவிடைமருதூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை பேராவூரணி ஆகிய வட்டாரங்களில் பருவம் தவறிய மழையால் பயிர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பௌண்டரிகபுரம், மாங்குடி முத்தூர் ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விளைந்த நெற்பயிர்கள் 33 சதவிகிதத்திற்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது

கணக்கீடு செய்ய உத்தரவு (Order to do the calculation)

இதன் அடிப்படையில் மாவட்டத்தில் வேளாண், வருவாய்த் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து கள ஆய்வு மேற்கொண்டு, பயிர் சேதம் குறித்து கணக்கீடு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

மேலும் படிக்க...

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.60,000பின்னேற்பு மானியம்!

கைதிகள் சாகுபடி செய்த கரும்புகள்- விற்பனைக்குத் தயார்!!

நெருங்கி வருகிறது தைப் பொங்கல் - தொடர் மழையால் மண்பானைகள் தயாரிப்பு பாதிப்பு!

English Summary: Collector orders survey of rain-affected crops in Tanjore
Published on: 13 January 2021, 07:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now