மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 October, 2021 11:13 AM IST
MK Stalin Tamilnadu CM

தமிழகத்தில் 2020 அக்டோபர் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் இறுதி வரை வரை, சம்பா பருவ நெல் சாகுபடி மட்டுமல்லாமல், பல்வேறு பயிர் சாகுபடியும் நடந்தது. கொரோனா ஊரடங்கு காலத்திலும், விவசாயிகள் ஆர்வமுடன் விளைச்சலை செய்தனர். டிசம்பர் மாதம் வீசிய, 'நிவர்' மற்றும், 'புரெவி' ஆகிய புயல்களால் 15 மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து, அறுவடை நேரம் ஜனவரியில், பருவம் எதிர்பாராத மழையாலும், பல மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது. மொத்தமாக, 25 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. பயிர் பாதித்த விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக, 1,715 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.

பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு, இழப்பீடு பெற்று தரும் பணிகளை, வேளாண் துறையினர் கையில் எடுத்தனர். தற்போது, 1,600 கோடி ரூபாயை, பயிர் இழப்பீடாக வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மாநிலம் முழுதும், 8 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவுள்ளது. வழக்கமாக, பயிர் இழப்பீடு நிவாரணம், நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இம்முறை, முதல்வர் ஸ்டாலின் அவர்களே தன் கையால் நிவாரணம் வழங்க, வேளாண் துறையினர் முடிவு செய்துள்ளனர். தேதி இன்னும் முடிவாகாததால் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க:

ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் தொடக்கம்!

சமையல் சிலிண்டர் வெறும் 634 ரூபாய்க்கு வழங்கப்படும்!

English Summary: Compensation: Rs 1,600 crore for 8 lakh farmers!
Published on: 12 October 2021, 11:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now