Farm Info

Tuesday, 12 October 2021 11:08 AM , by: T. Vigneshwaran

MK Stalin Tamilnadu CM

தமிழகத்தில் 2020 அக்டோபர் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் இறுதி வரை வரை, சம்பா பருவ நெல் சாகுபடி மட்டுமல்லாமல், பல்வேறு பயிர் சாகுபடியும் நடந்தது. கொரோனா ஊரடங்கு காலத்திலும், விவசாயிகள் ஆர்வமுடன் விளைச்சலை செய்தனர். டிசம்பர் மாதம் வீசிய, 'நிவர்' மற்றும், 'புரெவி' ஆகிய புயல்களால் 15 மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து, அறுவடை நேரம் ஜனவரியில், பருவம் எதிர்பாராத மழையாலும், பல மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது. மொத்தமாக, 25 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. பயிர் பாதித்த விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக, 1,715 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.

பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு, இழப்பீடு பெற்று தரும் பணிகளை, வேளாண் துறையினர் கையில் எடுத்தனர். தற்போது, 1,600 கோடி ரூபாயை, பயிர் இழப்பீடாக வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மாநிலம் முழுதும், 8 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவுள்ளது. வழக்கமாக, பயிர் இழப்பீடு நிவாரணம், நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இம்முறை, முதல்வர் ஸ்டாலின் அவர்களே தன் கையால் நிவாரணம் வழங்க, வேளாண் துறையினர் முடிவு செய்துள்ளனர். தேதி இன்னும் முடிவாகாததால் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க:

ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் தொடக்கம்!

சமையல் சிலிண்டர் வெறும் 634 ரூபாய்க்கு வழங்கப்படும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)