மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 June, 2021 7:06 AM IST
Credit : Dailythanthi

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் பருத்தி மறைமுக ஏலம் ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்படவுள்ளது.

இது குறித்து ஆட்சியர் ம.கோவிந்த ராவ் கூறுகையில்,

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ், கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன.

ஜூன் 3-வது வாரம் (3rd week of June)

இவற்றில் நடப்பாண்டுப் பருத்தி மறைமுக ஏலம் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கப் படவுள்ளது.

ஏலத்தின் போது பருத்தி கொள்முதல் செய்ய இந்தியப் பருத்திக் கழகத்தினர், உள்ளூர், வெளியூர் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பருத்தி விற்பனை (Sale of cotton)

எனவே, பருத்தி விவசாயிகள் தங்கள் விளை பொருளைத் தங்களது பகுதிக்கு அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குக் காலை 9 மணியளவில் கொண்டு சென்று கொள்முதல் நடைபெறும் நாள்களில் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு விற்பனை செய்து பயன்பெறலாம்.

மறைமுக ஏலம் (Indirect auction)

கொள்முதல் நடைபெறும் நாள்களில் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு விற்பனை செய்து பயன்பெறலாம்.

பகல் 11 மணிக்கு ஏலம் (Auction at 11 p.m.)

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களான கும்பகோணத்தில் புதன்கிழமையும், திருப்பனந்தாளில் வியாழக்கிழமையும், பாப நாசத்தில் வெள்ளிக்கிழமையும் பகல் 11 மணியளவில் ஏலம் நடைபெறும்.

தரம் பராமரிப்பு (Quality maintenance)

அதிகபட்ச விலைக் கிடைக்க தங்களது பருத்தியை நன்கு நிழலில் உலர வைத்து, அதிலுள்ள தூசி போன்ற பொருள்களை நீக்கி, தரமான பருத்தியை விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும்.

எனவே விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி, நல்ல விலை பெற்று பயன்பெறுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு (Contact)

கூடுதல் விவரங்களுக்கு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடப் பொறுப்பாளர்களை 0435 - 2481285 (கும்பகோணம்), 0435 - 2456447 (திருப்பனந்தாள்), 04374 - 222423 (பாபநாசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு!

கோவைக்காய் பயிரிட சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

English Summary: Cotton auction in Tanjore starts next week!
Published on: 17 June 2021, 06:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now