Farm Info

Sunday, 02 January 2022 10:30 AM , by: Elavarse Sivakumar

வயல் வரப்பில், பொந்து அமைத்துப் பதுங்கிக்கொள்ளும் எலிகள் கூட்டத்தால், பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தைக் கணக்கிடவே முடியாது.

எலித்தொல்லை

அமோக மகசூலைத் தடுக்கும் காரணிகளுள் ஒன்று, எலிகள். அத்தகைய எலிகளின் தீராதத் தொல்லையில் இருந்துப் பயிர் சேதத்தைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகளைக் கையாள்வோம். இதன் மூலம் சேதத்தைத் தவிர்த்து, நல்ல மகசூலையும், அதிக லாபத்தையும் ஈட்டமுடியும்.

நாம் கையாள வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பதைத் தெரிந்துகொண்டு, அவற்றை முறையாகக் கடைப்பிடிக்க விரும்பும் விவசாயியா? நீங்கள். அப்படியானால் இந்தத் தகவல்.

வழிமுறைகள் (Instructions)

  • களை, வரப்பு ஓரம், திடல் களங்களின் ஓரங்களை சுத்தமாக வைக்க வேண்டும்.

  • வரப்பின் அகலத்தை குறைப்பதன் மூலம் எலி வளைகளையும், எலிகளையும் குறைக்க முடியும்.

  • பட்டம் நடவை நெருக்கமாக நடவு செய்து எலிகளை கட்டுப்படுத்தலாம்.

  • எலிகள் எப்போதும் செங்குத்தாக தடுப்பின் ஓரத்திலேயே ஓடும் பழக்கம் உடையவை.

  • ஆகவே 8 அடிக்கு முக்கால் அடி பட்டம் விட்டு நடவு செய்யும் போது, பட்டத்தின் ஓரப்பகுதிகளை நெருக்கமாக நடவு செய்ய வேண்டும்.

  • அவ்வாறு நடவு செய்யும் போது அடர்த்தி ஏற்பட்டு மேலும் பயிர்கள் செங்குத்தாக உள்ளதால் எலிகள் வயலுக்கு செல்வது தடைபடும்.

  • பட்டம் விட்ட பகுதியில் ஒரு பக்கம் சென்று மறுபக்கம் வெளியேறி விடும்.

  • வறுத்த கடலைப்பருப்புடன் சிறிதளவு சிமெண்ட் கலந்து எலி நடமாடும் குடோன்களில் வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம்.

  • கோதுமை மாவில் சுட்ட சப்பாத்தியை சிறு சிறு துண்டு களாக்கி அவற்றை தேன் அல்லது வெல்லப்பாகில் முக்கி அதை சிமெண்ட் தோய்த்து வைக்க வேண்டும்.

  • எலிகள் அதனை சாப்பிடும் போது சிமெண்ட் எலி வயிற்றுக்குள் சென்று சில மணி நேரத்தில் இறந்து விடும்.

  • 90 சதவிகிதம் எள்ளுப்பொடி அல்லது கடலை மாவுடன் 5 சதவிகித சர்க்கரைப்பாகும் 5 சதவிகித பியூஸ் போன பல்பு தூள் கலந்து எலி நடமாடும் இடத்தில் வைக்க வேண்டும். இவற்றை சாப்பிட்ட எலிகள் சில மணி நேரத்தில் இறந்து விடும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)