Farm Info

Sunday, 21 March 2021 09:20 AM , by: Elavarse Sivakumar

Credit : Dailythanthi

வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை (Weather report)

இது வானிலை குறித்து ஆய்வு சென்னை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

வழிமண்டல சுழற்சி (Orbital cycle)

இலங்கைக்குத் தென்கிழக்கில், 1.5 கி.மீ., உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

மழைக்கு வாய்ப்பு (Chance of rain)

இதன் காரணமாக திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

3 நாட்களுக்கு மழை (Rain for 3 days)

தென் மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

வறண்ட வானிலை (Dry Weather)

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.

சூறாவளிக் காற்று (Hurricane force winds)

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 50 சி.மீ., வேகத்தில், இடி, மின்னலுடன் கூடிய சூறாவளிக் காற்று வீசும் வாய்ப்புள்ளது.

மீன்பிடிக்கத் தடை (Prohibition of fishing)

எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!

பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

சர்க்கரை நோயாளிகளுக்கு அட்டகாசமான டையட் லோ கிளைசெமிக்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)