நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 November, 2023 12:21 PM IST
crop insurance

பிரதம மந்திரி பயிர்க் காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டு சம்பா (சிறப்பு) பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்ய இறுதித்தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நவரை / கோடை (ராபி) பருவ பயிர்களைக் காப்பீடு செய்வதற்கான கடைசித் தேதியையும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) சம்பா (சிறப்பு) மற்றும் நவரை / கோடை (ராபி) பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் யுனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் II சம்பா பருவத்திலும் நெல் III, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்கள் நவரை பருவத்திலும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. சம்பா பருவத்தில் காப்பீடு செய்யப்படும் நெற்பயிர் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான 2023 நவம்பர் மாதம் 15-ம் தேதிக்குள்ளும், நவரை பருவத்தில் காப்பீடு செய்யப்படும் (நெல் மற்றும் நிலக்கடலை) பயிர்களை 2024 ஜனவரி மாதம் 31-ம் தேதிக்குள்ளும், கரும்பு பயிரினை 2024 மார்ச் 30-ம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 15 சதவீதம் மட்டும் காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 512.25, நிலக்கடலைக்கு ரூ. 458 கரும்பு பயிருக்கு ரூ. 2900) செலுத்தினால் போதுமானது.

எனவே, சம்பா மற்றும் நவரை பருவங்களில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ சேவை மையங்கள் தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் (www.pmfby.gov.in ) நேரடியாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது தேவைப்படும் ஆவணங்கள்: முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கள்/ இ அடங்கல்/ விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் (Bank Pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhaar Card) நகல்.

மேற்குறிப்பிட்ட ஆவணங்களை இணைத்து கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ சேவை மையங்கள்) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்/ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்று கொள்ளலாம்.

இதையும் காண்க:  விவசாயிகளே VAO- விடம் இந்த சான்றிதழ் வாங்குனீங்களா?

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் விவசாய பரப்பானது 75 சதவீத்திற்கும் மேல் விதைப்பு செய்ய இயலாமை / விதைப்பு பொய்த்தல் மூலம் பாதிப்பு ஏற்பட்டு இருப்பின் திட்ட விதிமுறைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட காப்பிட்டுத் தொகையில் 25 சதவீதம் இழப்பீட்டுத் தொகையாக பெறலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ www.pmfby.gov.in அணுகவும்.

அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையோ அல்லது திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகுமாறு விவசாய பெருங்குடி மக்களை ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் காண்க:

மகளிருக்கான 1000 ரூபாய்- பயனாளிகளின் எண்ணிக்கை உயர்வு

TANTEA தொழிலாளர்களுக்கு டபுள் ஹேப்பி நியூஸ்- முதல்வர் அறிவிப்பு

English Summary: Dear farmers the last date for rabi crop insurance following Samba
Published on: 10 November 2023, 12:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now