மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 January, 2021 6:21 PM IST
Credit : Asian age

வேளாண் விளைப் பொருட்களை பதப்படுத்தும் நிறுவனங்கள், பாரத பிரதமர் அறிவித்த உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் பெறலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக, அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறு-குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை

இத்திட்டத்தில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளை பொருள் என்ற அடிப்படையில், தருமபுரி மாவட்டத்துக்கு சிறுதானியங்கள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

 

பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு 35 % வரை மானியம்

மேலும், இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35% அல்லது ரூ.10 லட்சம் வரை மானியம் பெற்று பயன்பெற வாய்ப்பு உள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

கடன்களுக்கு வங்கி மூலம் ஏற்படு

மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். மேலும், விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடர்பு கொள்ளலாம். எனவே, சிறுதானியங்கள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைப் பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

வீட்டுத் தோட்டத்திற்கு ஏற்ற சிறகு அவரைக்காய்! தென்னையில் வாடல் நோயைக் கட்டுப்படுத்துமா?

இயற்கை விவசாயத்தை கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கும் இயற்கை விவசாயி!

English Summary: Dharmapuri Collector announced that agro-processing companies can avail the benefits offered under FME scheme announced PM
Published on: 23 January 2021, 06:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now