Farm Info

Monday, 22 August 2022 02:06 PM , by: Deiva Bindhiya

Distribution of rice varieties suitable for Samba season at 50% subsidized price

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரம், வேளாண்மை - உழவர் நலத்துறை வேளாண் விரிவாக்க மையத்தில் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரங்களான ஆர்.என்.ஆர், ஜே.சி.எல், வைகை-1, டி.கே.எம்-13 போன்ற நெல் இரகங்கள் மானிய விலையில் இருப்பு உள்ளது.

மேலும் மண்ணில் மட்குண்டு கிடக்கும் தழைச்சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்துக்களை களித்து பயிருக்கு ஏற்ற வகையில் அல்லது பயிருக்கு சத்துக்களை எடுத்து தரும் உயிர் உரகங்கள் 50% மானியத்தில் உள்ளது.

மேலும் மண்ணின் மூலம் பரவும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்திட உயிரியல் கட்டுப்பாடு காரணிகளான சூடோ மோனஸ் டிரைக்கோடர்மா விரிடி மானிய விலையில் தற்போழுது இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, நெற்பயிரில் ஏற்படும் செந்தாழை உரப்பற்றாக்குறையை நீக்க நுண்ணூட்டங்கள் 50% மானியத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அனைவரும் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

தமிழக அரசு பயிர் காப்பீட்டு பிரீமியம் மானியத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி ஓதுக்கீடு

TNAU சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பற்றிய பயிற்சி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)