Farm Info

Saturday, 09 October 2021 06:49 AM , by: Elavarse Sivakumar

Credit : Maalaimalar

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பது குறித்த 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வேளாண் படிப்பு (Agricultural Studies)

கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களையும் கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்து வருகிறது.

தொழில்முனைவோராக மாற (Become an Entrepreneur)

சான்று பெற்ற பயிர் ரகங்களை அறிமுகப்படுத்துவதுடன், அவற்றில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சாகுபடித் தொழில்நுட்பம், அதிக மகசூலுக்கான சூட்சமம் என விவசாயத்திற்கு இன்றியமையாத விஷயங்களையும் வேளாண் பல்கலைக்கழகம் கற்றுக்கொடுத்து வருகிறது.

அதேநேரத்தில் தொழில்முனைவோராக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பணி மகத்தானது.

2 நாள் பயிற்சி (2 day training)

அந்த வரிசையில், வரும் 21.10.2021 மற்றும் 22.10.2021 தேதிகளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பது பற்றிய இரண்டு நாட்கள் பயிற்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி நேரம் (Training time)

காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பயிற்சியில் பின்வரும் தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்துக் கற்பிக்கப்பட உள்ளது.

சிறப்பு அம்சங்கள் (Special Features)

  • மசாலா பொடிகள்

  • தயால்நிலை பேஸ்ட்

  • காளான் ஊறுகாய்

  • வாழைப்பூ ஊறுகாய்

  • பாகற்காய் ஊறுகாய்

  • கத்திரிக்காய் ஊறுகாய்

  • வெங்காய ஊறுகாய்

இத்தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ள தொழில்முனைவோர் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் 1770ரூபாயை முதல் நாள் அன்று கட்டணமாகச் செலுத்திப் பயிற்சியில் கலந்துகொண்டுப் பயனடையலாம்.

கூடுதல் விபரங்களுக்கு (For more details)

பேராசிரியர் மற்றும் தலைவர்,

அறுவடை பின்சார் தொழில்நுட்பம்

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர் 641 003 என்ற முகவரியிலும்,

0422 -6611268, 044 - 6611340 என்றத்

தொலைப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகள் தயாரிக்கப் பயிற்சி- TNAU ஏற்பாடு!

ரூ.1800க்கு விற்பனையாகும் வேப்பங்குச்சி- அமெரிக்காவில் நடக்குது இந்தக் கொடுமை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)