நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 August, 2022 11:58 AM IST
Zucchini Cultivation

ஓராண்டு தாவரமாக வேகமாக படர்ந்து செல்லும் சுரைக்காய் ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் பெறலாம். தரையில், கூரையில், மாட்டுக்கொட்டகையில் கொடியை படரவிடலாம். பந்தல் இன்றியும் வறட்சியை தாங்கி வளரும்.

சுரைக்காய் சாகுபடி (Zucchini Cultivation)

சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் பி, புரதம் உள்ளன. சுரைக்காய் ரகங்களில் கோ 1, அர்காபஹர், பூசா சம்மா, புராப்லிபிக் நீளம், புராலிக் உருண்டை மெகதுாத் மற்றும் பூசா மஞ்சரி ரகங்கள் குறிப்பிடத்தக்கவை. நாற்றாய் வளர்ப்பது நல்ல லாபம் தரும். ஒரு ஏக்கருக்கு தேவையான 1.200 கிலோவை பாலிதீன் பை அல்லது குழித்தட்டு முறையில் வளர்த்து நடலாம். அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கிலோ விதைக்கு 500 கிராம் அளவில் ஆறிய அரிசிக்கஞ்சியில் கலந்து கலவையில் நன்கு கலக்கி நிழலில் உலர்த்தி பின் விதைக்கலாம்.

நடவு வயலுக்கு 10 டன் மட்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் 5 டன், 188 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் இட வேண்டும். ஏக்கருக்கு 800 கிராம் அசோஸ்பைரில்லம் (4 பாக்கெட்), சூடோமோனஸ் 5 பாக்கெட் அளவில் மட்கிய தொழு உரத்துடன் 40 கிலோ வேப்பம் புண்ணாக்கு சேர்த்து கடைசி உழவிற்கு முன் இடவேண்டும். செடிக்கு செடி 2.5 மீட்டர் இடைவெளி, வரிசைக்கு வரிசை 2 மீட்டர் வீதம் இடைவெளியில் குழியெடுக்க வேண்டும். குழியை 7 முதல் 10 நாட்கள் ஆறவிட வேண்டும். ஓரடி நீளம், அகலம், ஆழத்தில் குழி தோண்டிட கருவிகள் உள்ளன. குழிக்கு ஒரு நாற்று நட வேண்டும்.

பெண் பூக்கள் தோன்றிட 10 லிட்டர் தண்ணீரில் 2.5 மில்லி 'எக்ரல்' பயிர் வளர்ச்சி ஊக்கி கலந்து முதல் இரண்டு இலை உருவாகிய பின் முதல் முறையும் வாரம் ஒரு முறை இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். உயர் விளைச்சல் ரகத்துக்கு ஏக்கருக்கு 120 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். 30 நாட்கள் கழித்து தழைச்சத்து, சாம்பல் சத்துக்கள் மேலுரமாக இட வேண்டும். வண்டுகள் வந்தால் ஒரு லிட்டர் நீரில் 'மீதைல் டெமடான்' ஒரு மில்லி கலந்து தெளிக்கவும். தாமிரம் மற்றும் கந்தகத்தூள் தெளிக்கக்கூடாது. மோனோக்ரோட்டாபாஸ் பயன்படுத்தக்கூடாது.

இளங்கோவன்,
வேளாண் இணை இயக்குனர்
காஞ்சிபுரம்
98420 07125

மேலும் படிக்க

பலாப்பழ ஐஸ்கிரீம் உள்பட 10 விதமான பால் பொருட்கள்: அறிமுகம் செய்தது ஆவின்!

திண்டுக்கல் அருகே புடலங்காய் சாகுபடி: ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

English Summary: Drought Resistant Zucchini: Good Yield in One Year!
Published on: 20 August 2022, 11:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now