Farm Info

Saturday, 18 March 2023 08:14 AM , by: R. Balakrishnan

Electronic procurement of coconut

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு முறையில் தேங்காய் கொள்முதல் நடந்தது. இதனால், இனி விவசாயிகளுக்கு மிக எளிதான முறையில் தேங்காய்களை விற்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

தேங்காய் கொள்முதல்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்துக்கே சென்றும் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

இ-நாம் (e-NAAM)

இந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் பகுதி விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் சுமார் 300 தேங்காய்கள் கொள்முதல் நடைபெற்றது. செலவுகள் தவிா்ப்பு இதில் தேங்காய் ஒரு குவிண்டால் அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 300க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 100-க்கும் கொள்முதல் நடந்தது. விவசாயிகளின் இடத்துக்கே சென்று பரிவர்தனை செய்யப்படுவதால் போக்குவரத்து செலவு, ஏற்றுகூலி, இறக்குகூலி, கால விரயம் போன்ற செலவினங்கள் தவிர்க்கபடுகிறது.

மேலும் தேசிய வேளாண் மின்னணு திட்டத்தில் விற்பனை செய்யப்படுவதால் நல்ல விலையும், உடனடியாக பணமும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் படிக்க

Post Office: ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கள்!

இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)