மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 October, 2021 2:13 PM IST
E-Shram Portal Latest Update: Anyone can register! Full details!

நாட்டில் உள்ள அமைப்புசாரா துறையைச் சேர்ந்த 38 கோடி தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு இ-ஷ்ரம் (E Shram) போர்ட்டலைத் தொடங்கியுள்ளது. இந்த இ-ஷ்ரம் (E Shram) போர்டல் மூலம் அரசாங்கம் தேசிய தரவுத்தளத்தை உருவாக்கும். இந்த முன்முயற்சியின் கீழ், 12 இலக்க பிரத்யேக எண்ணைக் கொண்ட இ-ஷ்ரம் (E Shram) கார்டுகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும், மேலும் இந்த இ- ஷ்ரம் (E Shram) கார்டு நாடு முழுவதும் செல்லுபடியாகும்.

இ- ஷ்ராம் (E Shram) கார்டுக்கான பதிவு செய்யும் செயல்முறையைச் சரிபார்க்கவும்

பதிவு செய்ய உதவும் இலவச எண்:

தொழிலாளர்களுக்கு உதவ தேசிய கட்டணமில்லா எண் 14434 தொடங்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்திர யாதவ் இ-ஷ்ரம் (E Shram) போர்ட்டலின் லோகோவை வெளியிட்டார்.

யார் பதிவு செய்ய தகுதியானவர்?

16 முதல் 59 வயது வரை உள்ள அமைப்புசாரா துறையில் பணிபுரியும் எந்த ஒரு தொழிலாளியும் இந்த இ-ஷ்ரம் (E Shram) கார்டுக்கு பதிவு செய்யலாம். இருப்பினும், போர்ட்டலில், நீங்கள் EPFO அல்லது ESIC இன் உறுப்பினரா என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும். நீங்கள் EPFO அல்லது ESIC இல் உறுப்பினராக இருந்தால் இ-ஷ்ரம் (E Shram) போர்ட்டலில் உங்களால் பதிவு செய்ய முடியாது. அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மற்றும் EPFO அல்லது ESIC இன் பலன்களைப் பெற முடியாதவர்களுக்காக மட்டுமே இது தொடங்கப்பட்டுள்ளது.

இ- ஷ்ரம் (E- Shram) கார்டுக்கு யார் விண்ணப்பிக்கலாம் என்ற முழுமையான பட்டியல்

  • விவசாயத் தொழிலாளர்கள்
  • பால் விவசாயி
  • காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாளர்
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
  • செங்கல் சூளை தொழிலாளி
  • மீனவர்கள், மரம் அறுக்கும் தொழிலாளர்கள்
  • லேபிளிங் மற்றும் பேக்கிங்
  • தச்சர், பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலாளி
  • உப்பு தொழிலாளி
  • கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள்
  • வீட்டு வேலையாட்கள்
  • முடி திருத்துபவர்
  • செய்தித்தாள் விற்பனையாளர்கள்
  • ரிக்ஷா ஓட்டுனர்
  • ஆட்டோ டிரைவர்
  • பட்டு உற்பத்தி தொழிலாளி
  • வீட்டு வேலைக்காரி
  • தெரு வியாபாரிகள்
  • MGNREGA தொழிலாளர்கள்

இந்த இ-ஷ்ரம் (E Shram) போர்ட்டலில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி குறித்து மத்திய அரசு அல்லது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உத்தரவும் வெளியிடப்படவில்லை. எனவே, தொழிலாளர்கள் தங்கள் இ-ஷ்ரம் (E Shram) அட்டையை எந்தத் தொந்தரவும் இல்லாமல் இப்போது பெறலாம்.

எந்தவொரு தொழிலாளியும் இந்த பதிவு போர்ட்டலைப் பார்வையிட்டு பதிவு செய்யலாம். இ-ஷ்ரம் (E Shram) போர்ட்டலில் பதிவு செய்வது முற்றிலும் இலவசம். இதற்கு சிஎஸ்சி மையங்களில் தொழிலாளர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

மேலும் படிக்க:

PM Kisan Tractor Yojana : டிராக்டர் வாங்குவதற்கு அரசு 50% மானியம்! விரைவில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

English Summary: E-Shram Portal Latest Update: Anyone can register! Full details!
Published on: 30 October 2021, 02:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now