Farm Info

Saturday, 20 November 2021 08:17 AM , by: Elavarse Sivakumar

தொடர் மழை காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் ஒரு கிலோத் தக்காளி 100 ரூபாயை எட்டிள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

தொடரும் மழை (Continuing rain)

வடகிழக்கு பருவமழை ஒருபுறம், அடுத்தடுத்து உரவான குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு மறுபுறம், இவற்றால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக, கரூர் மாவட்டத்தில் ஒரு கிலோத் தக்காளி விலை 100ரூபாயைத் தாண்டியுள்ளது.

சந்தைகள்

கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் உழவர் சந்தைகளும், பல்வேறு பகுதிகளில் வாரச்சந்தைகளும், தினசரி காய்கறி கடைகளும் உள்ளன. இந்த சந்தைகளுக்கு காய்கறிகள்,பழங்கள்,கீரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் கொண்டுவந்து வியாபாரிகள், விவசாயிகள் விற்பனை செய்கிறார்கள்.

பெரும்பாலான காய்கறிகள் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, நீலகிரி, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.

மழையால் பாதிப்பு (Damage by rain)

இந்தநிலையில் தொடர் மழையின் காரணமாக செடிகளில் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் தாக்குப் பிடிக்க முடியாமல் உதிர்ந்துள்ளன. இதனால் தக்காளி பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். மேலும், சந்தைகளுக்கு போதுமான அளவு வரத்து இல்லாததால் தக்காளி விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

விலைஉயர்வு (increase in price)

கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 வரை விற்பனையானது. அதன்பிறகு படிப்படியாக விலை உயர்ந்து தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில கடைகளில் ரூ.90 வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கரூர் மாவட்டத்திற்கு மேச்சேரி, மேட்டூர், காடையாம்பட்டி, ஓமலூர், வாழப்பாடி, ஓசூர், ராயக்கோட்டை, பெங்களூரு உள்ளிட்டப் பல்வேறுப் பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தொடர் மழை காரணமாக செடிகளில் பூக்கள் உதிர்ந்துள்ளன. இதனால் தக்காளி சாகுபடி கடுமையாக பாதித்துள்ளது.

வரத்துகுறைவு

இதனால் நாட்டுத் தக்காளி, ஆப்பிள் தக்காளி சந்தைகளுக்கு குறைந்தளவே வருகிறது. வரத்துகுறைவு காரணமாக தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது என்றனர்.

மேலும் படிக்க...

வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20000 நிவாரணம்!

பசுவை மீட்ட பஞ்சாப் முதல்வர்: பொதுமக்கள் பாராட்டு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)