மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 March, 2021 5:29 PM IST
Credit : Futures Cattle

வாழப்பாடி பகுதியில் கடந்த இரு மாதங்களாக வறட்சி ஏற்பட்டுள்ளதால், கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்குத் தீவனம் வழங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

பிரதானத் தொழில் (The main Business)

சேலம் மாவட்டம், வாழப்பாடி, சுற்றுப்புற பகுதிகளில் பெரும்பாலானோர், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலே பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது.

விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும், வேலை வாய்ப்பு, வருவாய்க்காக விவசாயம் சார்ந்த தொழிலான ஆடுகள் கறவை மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பசுந்தீவனங்கள் (Green fodder)

இப்பகுதியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தாண்டு பரவலாக மழை பெய்தது. இதனால் விளைநிலங்களில் மட்டுமின்றி மேய்ச்சல் தரையாகப் பயன்படும் தரிசு நிலங்களிலும், கால்நடை விரும்பி உண்ணும் செடி, கொடி உள்ளிட்ட பசுந் தீவனங்கள் நன்கு வளர்ந்தன.

கூடுதல் வருவாய் (Extra income)

இதனால் கடந்த 6 மாதங்களாகக் கால்நடை தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.
விலை கொடுத்து தீவனம் வாங்க வேண்டிய நிலை ஏற்படாததால், விவசாயிகளுக்கு கால்நடைப் பராமரிப்பு செலவு கணிசமாகக் குறைந்ததுடன், கூடுதல் வருவாயும் கிடைத்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடும் வெயில் (Heavy sun)

இந்நிலையில், கடந்த இரு மாதங்களாகக் கடுமையான வெயில் காணப்படுகிறது. வாட்டி வதைக்கும் வெப்பம் தாங்காமல் விளைநிலங்கள், தரிசு நிலங்களில் செடி, கொடிகள் காய்ந்து கருகி வருகின்றன.

பசுந்தீவனத் தட்டுப்பாடு (Green fodder shortage)

இதன் காரணமாக கால்நடைகளுக்கு பசுந்தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கான பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். எனவே, கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கோடை மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க...

மாடுகளின் வாயுத் தொல்லையை தீர்க்க எளிய மருந்து!

கால்நடைகளுக்கான தீவன சோளம் சாகுபடி முறை!

காளை மாடுகளின் இனவிருத்திக்கான பராமரிப்பு- சில ஆலோசனைகள்!

English Summary: Echo of severe drought in Vazhappadi, shortage of fodder for livestock!
Published on: 27 March 2021, 05:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now