நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 December, 2021 9:00 AM IST
To control Scirpophaga incertulas in Paddy crops!

நெற்பயிர்களில் குருத்துப் பூச்சி தாக்குதலால் 5 முதல் 20 சதவீத பயிர் சேதம் (Crop Damage) ஏற்படுகிறது. முன் பட்டத்து பயிர்களை விட பின் பட்டத்து பயிர்களே அதிகளவில் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

குருத்துப் பூச்சித் தாக்குதல் (Scirpophaga incertulas)

புழுக்கள் செடிகளின் அடிப்பாகத்தில் தண்டை துளைத்து உட்சென்று உட்திசுக்களை தின்பதால் நடுக்குருத்து மடிந்து விடும். இளம் நாற்றை புழு தாக்கும் போது நடுக்குருத்து வாடி குருத்தழிவு உண்டாகும். பூக்கும் பருவத்தில் புழு தாக்கினால் கதிர் காய்ந்து வெண்ணிற பதர்களாக வெளிவரும். இதை வெண்கதிர் என்பர். வாடிய குருத்து அல்லது வெண் கதிரை இழுத்தால் தனியாக வந்துவிடும்.

தடுக்கும் முறைகள் (Control Methods)

இதை கட்டுப்படுத்துவதற்கு தழைச்சத்தை தேவைக்கு அதிகமாக அல்லது ஒரே தடவை மொத்தமாக இடக்கூடாது. பூக்கும் பருவத்தில் அதிக தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். நாற்றுகள் நெருக்கமாக நடக்கூடாது. இலைகளின் நுனியில் முட்டை குவியல் இருப்பதால் எளிதில் சேகரித்து அழிக்கலாம். நடுவதற்கு முன் நாற்றுகளின் நுனிப்பகுதியை கிள்ளி விடுவதன் மூலம் முட்டை குவியல்களை அழிக்கலாம்.

வாடிய நடுக்குருத்துகளை அழிக்க வேண்டும். இரவில் எக்டேருக்கு ஒரு விளக்குபொறி வைத்து அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். பயிர் நடவு செய்த 30 மற்றும் 37 நாட்களில் டிரைகோகிரம்மா ஜப்பானிக்கம் எனப்படும் முட்டை ஒட்டுண்ணிகளை 2 சி.சி. அளவில் இட வேண்டும்.

எக்டேருக்கு 25 கிலோ வேப்பங்கொட்டை சாறு அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம். பயிர் அறுவடைக்கு (Harvest) பின் உடனேயே உழவு செய்வதன் மூலம் பயிரின் துாரில் இருக்கும் புழுக்களை அழிக்கலாம்.

சேதம் அதிகமாக இருந்தால் எக்டேருக்கு ஒரு கிலோ அசிபேட் அல்லது 62.5 கிலோ பைப்ரோரினில் பூச்சிமருந்தை தெளிக்கலாம்.

-உஷாராணி, உதவி பேராசிரியர்
பூச்சியியல் துறை
ஹேமலதா, ஒருங்கிணைப்பாளர்
வேளாண்மை அறிவியல் நிலையம்
மதுரை
94884 48760

மேலும் படிக்க

தண்ணீர் இருந்தும் தரிசாக கிடக்கும் விவசாய நிலங்கள்‌!

மஞ்சளில் மரபணு சோதனை நடத்திய இந்திய விஞ்ஞானிகள்!

English Summary: Entomologist's advice to control Scirpophaga incertulas in Paddy crops!
Published on: 11 December 2021, 09:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now