மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 July, 2022 7:41 AM IST

மத்திய அரசின் PMEGP திட்டத்தின் இணைந்தால், உங்களுக்கு 35 சதவீத மானியத்துடன் கடனும் கிடைக்கும். உங்கள் கனவான தொழில் அதிகபராக மாறுவீர்கள்.

பிரதமரியின் ரோஸ்கார் வேலைவாய்ப்பு யோஜனா (PMRY) திட்டம் மற்றும் கிராம புறவேலை வாய்ப்பு திட்டம் (REGP)யும் ஆகிய இரண்டு திட்டங்களும் இணந்து, ஆகஸ்டு 15, 2008யில் உருவானது தான், இந்த பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு பெருக்கு திட்டம்(PRIME MINISTERS EMPLOYMENT GENERATION PROGRAM). 

தற்போது கிராமம், நகர்ப்புற பேதமின்றி அனைத்து இடங்களிலும் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.புதிய அறிவிப்பின் படி அமைப்பு மற்றும் குழுவாக தொழில் தொடங்க முடியாது. தனிப்பட்ட நபர் மட்டும் மானியம் பெற முடியும்.

தொழில் கடன்

தற்போது வேளாண் சார்ந்த தொழில்களான, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களைத் தொடங்கக் கடன் வழங்கப்படும். தொழிலை கிராமமோ அல்லது நகரமோ எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம்.

சலுகைகள்

பெண்களுக்கு 30 சதவிகிதமும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15%ம், பழங்குடியின இனத்தவர்களுக்கு 7.5 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. கதர் கிராமத் தொழில் ஆணையம் (KVIC) உட்பட்ட 11 மாவட்டங்களில் 276 புதிய தொழில் தொடங்குவதற்கு மானியம் மட்டும் ரூ.8.68 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

விவசாயம் சார்ந்த தொழில் செய்ய விரும்பும் படித்த, வேலை வாய்ப்பற்ற வேளாண் தொழில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அந்த அந்த மாவட்டத்திலுள்ள தொழில் மையம்/கதர் கிராமத்தொழில் வாரியத்தை தொடர்பு கொண்டு புதிய தொழில் தொடங்கி தொழில் முனைவோராக மாறலாம்.4 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கலாம். நாமும் நாடும் முன்னேற வழிகாட்டிகளாக மாறலாம்.

35 % மானியம்

தொழிலை நகரத்தில் தொடங்கினால் 15 முதல் 25 சதவீகிதமும், கிராமத்தில் தொடங்கினால் 25 முதல் 35 சதவீகிதமும் மானியம் உண்டு. தற்போது முதலீட்டு கடனும் மானியமும் புதிய பார்முலாபடி இரண்டு மடங்கு உயர்ந்துள்ளன.


தகவல்
அக்ரி கூ.சந்திரசேகரன்,
வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை 94435 70289

மேலும் படிக்க...

சரிவில் தங்கம் விலை- 2 நாட்களில் ரூ.1,064 குறைந்தது!

காணாமல் போன 1.50லட்சம் ரூபாய் பேனா- வலைவீசும் போலீஸ்!

English Summary: Entrepreneurial Transformation PMEGP Program - 35% Subsidy!
Published on: 09 July 2022, 07:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now