Farm Info

Monday, 08 November 2021 11:17 AM , by: Elavarse Sivakumar

Credit : Regrow

கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு, சொட்டு நீர் அமைக்க கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

100 % மானியம் (100% subsidy)

கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க, சொட்டு நீர் பாசனம் அமைக்கக் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

மானியம் (Subsidy)

கிணற்றுப்பாசனத்தில், சிறு குறு விவசாயிகளுக்கு எக்டருக்கு, ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 368 ரூபாய். இதர விவசாயிகளுக்கு, ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து, 115 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

ஆழ்துளைக் கிணற்றுப்பாசனத்தில், சிறு குறு விவசாயிகளுக்கு, ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 844 ரூபாயும், இதர விவசாயிகளுக்கு, ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 591 ரூபாய் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

கூடுதல் மானியம்

இந்த திட்டத்தின்படி தற்போது, நில மட்டத்துக்கு கீழ் சொட்டு நீர் பாசனம் அமைப்பதாக இருப்பின், கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. எனவே கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை மற்றும் அமராவதி சர்க்கரை ஆலை அலுவலர்களையோ, வட்டார வேளாண் உதவி இயக்குனர்களையோத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் பதியலாம்விவசாயிகள், https://tnhorticuluture.tn.gov.in/horti/mimis என்ற இணைய தளத்தில், நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு பக்கத்தில், தாங்களே பதிவு செய்து கொள்ளலாம்.

தங்களுக்கு விருப்பமான நுண்ணீர் பாசன நிறுவனம் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குனர்களைத் தொடர்பு கொண்டும், இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க...

கரிசனம் காட்டாத கனமழை- வெள்ளத்தில் மூழ்கிய 5,500 ஏக்கர் நெற்பயிர்கள் !

4 நாட்களுக்கு மிக கனமழை - சென்னைக்கு ரெட் அலேர்ட்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)