மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 June, 2022 10:47 AM IST

பஞ்சு விலை, தற்போது படிப்படியாக இறங்க துவங்கி இருப்பது, திருப்பூர் உட்பட தமிழக ஜவுளி உற்பத்தி துறையினரை சற்று ஆறுதல் அடையச் செய்துள்ளது. இந்த விலை சரிவு, ஜவுளித் துறையினரிடையே பெரும் மாற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிடுகிடு உயர்வு

பருத்தி சீசனுக்கான பஞ்சு வரத்து, 2021 அக்டோபரில் துவங்கியது. தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வந்த பஞ்சு விலை புதிய உச்சத்தை எட்டியது. முன் எப்போதும் இல்லாத வகையில், பஞ்சு விலை கேண்டி எனப்படும், 356 கிலோ, கடந்த ஏப்ரல் மாதத்தில், 1 லட்சம் ரூபாயை எட்டிப்பிடித்தது. மேலும் உயர்ந்து, ஒரு கேண்டி பஞ்சு அதிகபட்சமாக, 1.15 லட்சம் ரூபாய் வரை உச்சத்தை தொட்டது.இதனால் கடந்த இரு மாதங்களாக, 1.08 லட்சம் ரூபாய் என்ற விலையில் நிலை கொண்டது. வரலாறு காணாத பஞ்சு விலை, ஒட்டுமொத்த இந்திய ஜவுளி உற்பத்தி துறையையும் ஆட்டம் காணச் செய்தது.

உற்பத்தி குறைந்தது

தமிழக நுாற்பாலைகள், அனைத்து ரக நுால் விலைகளையும் தொடர்ந்து உயர்த்தின. பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூர் உட்பட தமிழக ஜவுளி நகரங்களுக்கு, வெளி மாநிலம், வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து ஆடை தயாரிப்புக்கு 'ஆர்டர்' வருகை வெகுவாக குறைந்தது. ஆடை உற்பத்தி நிறுவனங்களின் பருத்தி நுால் கொள்முதல் வெகுவாக குறைந்துள்ளது. இது, நுாற்பாலைகளுக்கு பெரும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இழப்பை சமாளிக்க, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உட்பட தமிழக நுாற்பாலைகள், நுால் உற்பத்தியை குறைத்துள்ளன. இதையடுத்து, உள்நாட்டில் பருத்தி பஞ்சு தேவை குறைந்துவிட்டது.

அடுத்த சீசன்

வரும் செப்டம்பரில், மீண்டும் பருத்தி சீசன் துவங்க உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் புதிய பஞ்சு வரத்து துவங்கும் போது விலை குறையும். இக்காரணங்களால், தற்போது பஞ்சு விலை படிப்படியாக இறங்க துவங்கியுள்ளது.

ரூ.96,000

இந்நிலையில் ஒரு கேண்டி பஞ்சு விலை, 96 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. பஞ்சு விலையின் இறங்கு முகம், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் உட்பட தமிழக ஜவுளி துறையினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

புதிய சீசன் துவங்கும் போது, பஞ்சு விலை சரிந்து, நுால் விலையும் சீராகும், ஆடை தயாரிப்புக்கான புதிய ஆர்டர்களை பெறுவது எளிதாகும் என்ற நம்பிக்கையுடன் ஜவுளித்துறையினர் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க...

1 ரூபாய் நோட்டுக்கு ரூ.45,000 - வாங்க நீங்க ரெடியா?

டீ விலை ரூ.1 லட்சம்- என்னங்க இருக்கு அதுல?

English Summary: Falling cotton prices — the textile industry is delighted
Published on: 26 June 2022, 10:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now