Farm Info

Friday, 09 July 2021 08:27 PM , by: R. Balakrishnan

Credit : Daily Thandhi

வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருட்களை இருப்பு வைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என வேளாண் விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் கூறினார்.

ஏலம் மூலம் விற்பனை

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய், முந்திரி, கடலை, எள், மிளகாய், உளுந்து உள்ளிட்ட விளை பொருட்கள் வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் (Purchase) செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விளை பொருட்களை 6 மாதங்கள் வரை இருப்பு வைத்து 5 சதவீத வட்டியில் பொருளீட்டு கடன் (Loan) மூலம் பணம் பெற்றுக்கொள்ளலாம்.

தேங்காய் கொப்பரை

மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொப்பரை (Copra) கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த ஆண்டு இதுவரை 62 டன் நெல் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளால் இருப்பு வைக்கப்பட்டு ரூ.5.15 லட்சத்தையும், 212 டன் நிலக்கடலையை (Groundnut) இருப்பு வைத்து ரூ.53 லட்சத்தையும் பெற்று உள்ளதாக விற்பனை அலுவலர் தட்சிணாமூர்த்தி கூறினார்.

மேலும் படிக்க

குறுவை சாகுபடிக்கு பயிர்க்கடன்: கடலூரில் ரூ.34.57 கோடி வழங்கல்

மகசூலை அதிகரிக்க உதவும் பயிர் பூஸ்டர்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)