நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 March, 2022 6:58 PM IST
Farmers stockpiling maize as prices are likely to rise

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை சாகுபடி அதிகளவு நடைபெற்று தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர பிஏபி பாசனம் மூலமாகவும், சொட்டு நீர் பாசனம் மூலமாகவும், மானாவாரியாகவும் மக்காச்சோளம் சாகுபடி (Maize Cultivation) செய்யப்படுகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக மக்காச்சோளம் இருப்பதால் விவசாயிகள் இதை விரும்பி பயிரிடுகின்றனர்.

மக்காச்சோளம் சாகுபடி (Maize Cultivation)

கோழி தீவனமாக மக்காச்சோளம் பயன்படுவதால் மக்காச்சோளத்துக்கு சராசரியான விலை கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் படைப்புழு தாக்குதல், தொடர்ச்சியான மழை காரணமாக மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது: குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. 90 முதல் 110 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என்பதால் விவசாயிகள் விரும்பிப் பயிரிட்டு வருகிறோம். மக்காச்சோளத்துக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச் சோளம் அறுவடை செய்யப்பட்ட நிலையில் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு மக்காச்சோள சாகுபடி செய்ய ரூ.30 ஆயிரம் மட்டுமே செலவாகிறது. அதிகபட்சமாக ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் வரை மக்காச்சோளம் மகசூல் கொடுக்கும்.

விலை உயர வாய்ப்பு (Prices are likely to rise)

தற்போது மக்காச்சோளம் 100 கிலோ மூட்டை ரூ.2 ஆயிரத்து 300 வரை விற்பனையாகிறது. மேலும் விலை உயரும் வாய்ப்பு உள்ளதால் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். விலை உயரும் பட்சத்தில், விவசாயிகளின் இந்த முடிவால் இலாபம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க

கூடுதல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகையில் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

PM Kisan: மோசடிகளை தவிர்க்க அதிரடி நடவடிக்கை!

English Summary: Farmers stockpiling maize as prices are likely to rise!
Published on: 07 March 2022, 06:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now