மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 June, 2022 11:15 PM IST
Fig cultivation

அத்திப்பழம், மர வகையைச் சேர்ந்தது. இதை நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய, நடுத்தர மரமாகும். அத்தியில் நாட்டு அத்தி, டிம்லா அத்தி, ஆப்கான் அத்தி, இஸ்ரேல் அத்தி போன்ற வகைகள் அத்திப்பழ சாகுபடி முறைக்கு ஏற்ற இரகங்களாகும். தை மாதம் நடவிற்கு ஏற்ற பருவம் ஆகும். அத்தி மரமானது களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

அத்தி சாகுபடி (Fig Cultivation)

அத்தி செடிகள் சாகுபடி குறித்து, கடம்பத்துார் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயி வி.என்.ராமமூர்த்தி கூறியதாவது: எனக்கு சொந்தமான செங்கட்டு மண் நிலத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, அத்தி செடிகளை வாங்கி வந்து, சாகுபடி செய்துள்ளேன்.

இது, ஓராண்டுக்கு பின் மகசூல் வரும் என கூறினர். பிற, ஒட்டு ரகம் மற்றும் விதை பதியம் போட்ட செடிகளுக்கு, இது பொருந்தும்.விண் பதியத்தில் போடப்பட்ட செடிகளை சாகுபடி செய்யும் போது, சற்று வித்தியாசமாக உள்ளது. ஆறு மாதங்களில், அத்தி செடிகளில் காய் மகசூல் வந்துவிடுகிறது.

விண் பதிய முறையில் அத்தி சாகுபடி செய்யும்போது, செடிகள் வளர்த்தியாக இருந்தால், முதலில் காய்க்கும் காய்களை கிள்ளி எரியத் தேவையில்லை. அதை அப்படியே அறுவடைக்காக, செடிகளில் விட்டு வைக்கலாம். பிற ரக அத்தி செடிகளைவிட, மஹாராஷ்டிரா அத்தி செடிகளில், மகசூல் மற்றும் பராமரிப்புகள் எளிதாக உள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் தகவலுக்கு
வி.என்.ராமமூர்த்தி- 94446 10236

மேலும் படிக்க

உரத்தட்டுப்பாட்டை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?

பூச்சித் தாக்காத தினை சாகுபடி: சில நுணுக்கங்கள்!

English Summary: Fig Cultivation: The Experience of a Pioneer Farmer!
Published on: 29 June 2022, 11:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now