மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 February, 2020 3:17 PM IST

விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வர காத்திருக்கிறது புதிய சன்ன ரக நெல்.  சோதனை முறையில் அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டிருந்த புதிய சன்ன ரக நெல்,  தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. வேளாண் அதிகாரிகள் கூறுகையில்,  அதிக மகசூல் கிடைத்திருப்பதாக தெரிவித்தனர்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் வேளாண் பல்கலை மூலம் இயங்கும் திருப்பூர் வேளாண்மை அறிவியல் நிலையம், புதிய சிறிய ரக நெல் விஜிடி-1 ரகம் அறிமுகப்படுத்தி,  அமராவதி ஆயக்கட்டு பகுதி விவசாயிகளுக்கு வழங்கப் பட்டது. அவர்களுக்கு விதை, இடு பொருட்கள் மற்றும் தொழில் நுட்ப உதவிகள் என அனைத்தும் வழங்கப்பட்டு சாகுபடியை மேற்கொள்ள உதவியது. தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில், வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நெல் விஜிடி 1

130 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் நடுத்தர உயரம் கொண்ட சம்பா ரகமாகும். சீரகச் சம்பா ரகத்தை போன்றே இந்த ரக சாதம் மிருதுவாகவும், மிதமான வாசனையுடனும், உதிரியாகவும், சுவையாகவும் இருக்கும். ஒரு ஹெக்டேருக்கு 5,850 கிலோ வரை விளைச்சல் தரக்கூடியது.

இதுகுறித்து அறிவியல் நிலைய விஞ்ஞானி மருதுபாண்டி கூறுகையில்,  இந்த சன்னம் ரகம்  சீரக சம்பா பிரியாணி அரிசியை விட, அளவில் சிறியதாகவும் மற்றும் சுவை மிகுந்ததாகவும் இருக்கும். நோய் தாக்குதலை எதிர்த்து அதிக மகசூலும் கிடைக்கிறது. சிறிய ரகமாக இருப்பதால் கூடுதல் விலையும் கிடைக்க வாய்ப்புள்ளது. சாகுபடி செய்யும் விவசாயிகள், தொடர்ந்து இந்த ரகத்தை சாகுபடி செய்ய இருப்பதாகவும்,  மற்ற விவசாயிகளுக்கும் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தனர். இதனால், அமராவதி பகுதிகளில் இந்த புதிய ரக நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

English Summary: Get Ready to Enjoy New Variety of Paddy developed by IRRI: Krishi Vigyan Kendras informed
Published on: 26 February 2020, 03:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now