Farm Info

Thursday, 08 September 2022 06:40 AM , by: R. Balakrishnan

Custard Apple Cultivation

கோல்டன் சீதா பழம் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி டி.அரவிந்தன் பல்வேறு தகவல்களை கூறுகிறார்.

கோல்டன் சீதாப்பழம் (Golden Custard Apple)

மலைப் பிரதேசங்களில் விளையக்கூடிய சீதா பழங்களை பயிரிட முடிவு செய்து, கோல்டன் சீதா பழங்களை சாகுபடி செய்துள்ளேன். இது, இரண்டு ஆண்டுகளுக்கு பின் மகசூல் தரக்கூடியது. நம் ஊரின் மணல் கலந்த சவுடு மண்ணுக்கு அருமையாக வளர்கிறது. இப்பழங்களை பொறுத்த வரை, ஆகஸ்ட் மாதம் முதல் காய் பிடிப்பு தொடங்கும். தொடர்ந்து, டிசம்பர் மாதம் வரை காய்க்கும்.

ஒரு ஏக்கரில் கோல்டன் சீதா பழங்களை சாகுபடி செய்தால், நான்கு மாதங்களில் 2 டன் காய்கள் வரை அறுவடை செய்யலாம். சந்தை நிலவரத்தை பொறுத்து, கிலோ 80 முதல், 120 ரூபாய் வரை விற்கலாம். சாகுபடி பரப்பு அதிகமாக இருந்தால், கோல்டன் சீதா பழத்தில் கணிசமான வருவாய் ஈட்ட முடியும் என்று அவர் கூறினார்.

கோல்டன் சீதாப்பழத்தில் இருக்கும் தாதுப்பொருள்கள் நம் உடலில் இருக்கும் எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இதயத்துக்கும் வலு கொடுக்கும். உடலில் உள்ள திசுக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற ஆன்டி- ஆக்ஸிடண்ட் தேவை. இதை உடலுக்குத் தருவது வைட்டமின் சி. சமைத்த உணவை காட்டிலும் பழங்களில் நிறைவாக வைட்டமின் சி கிடைக்கும்.

தொடர்புக்கு:
டி.அரவிந்தன்
88257 46684

மேலும் படிக்க

விவசாயத்தில் நல்ல இலாபம் ஈட்டும் சூப்பரான தொழில் இது தான்!

நிலக்கரி உற்பத்தியில் மாஸ் காட்டும் இந்தியா!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)