மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 January, 2023 10:01 AM IST
Paddy procurement centers

நாமக்கல் மாவட்டம் எலந்தைகுட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு இந்த ஆண்டு ஆயிரம் மெட்ரிக் டன் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

நெல் கொள்முதல் நிலையம் (Paddy procurement centers)

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் 4000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதால் அரசின் சார்பில் ஆண்டுதோறும் எலந்தைகுட்டையில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். இதனை தொடர்ந்து இந்த ஆண்டிற்கான நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், ”2021 - 2022ம் ஆண்டில் 116 விவசாயிகளிடம் இருந்து 626 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்த நிலையில் தற்போது இந்த ஆண்டு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று எருமைப்பட்டியில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் என மாவட்டத்தில் இரண்டு கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வேளாண்மை துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் பயிரிட்ட நெல்லுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிடமிருந்து கொள்முதல் செய்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக மூன்று நாட்களில் உரிய தொகை செலுத்தப்படும்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கொள்முதல் செய்யப்படும் நெல் வீணாகாமல் உடனடியாக வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த ஆண்டு நெல் குவிண்டால் ஒன்றுக்கு 20160 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த அறிவிப்பால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

அதிக உப்பு ஆபத்தானது: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

பயிற்சியை முடித்தவுடன் வேலைவாய்ப்பு! அரசின் அருமையான திட்டம் இதோ!

English Summary: Good News for Paddy Farmers: Increased Paddy Procurement Stations!
Published on: 19 January 2023, 10:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now