மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 February, 2021 6:31 PM IST

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் அறிவிப்பு (Chief Minister's announcement)

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையக் கூட்டத்தின்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை விதி 110ன் கீழ் விவசாய கடன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

ரூ.12,110 கோடி (Rs.12,110 Crore)

அதில், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், வேளாண்துறைக்கு அதிமுக அரசு முக்கயத்துவம் அளித்து வருகிறது. பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.கொரோனா, புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்த அதிமுக அரசு சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம், எனக் கூறினார்.

இதற்கு முன்னதாக 5 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2016ல் ஆண்டில் விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை தமிழக அரசு ரத்து செய்திருந்தது.


விவசாயிகள் வரவேற்பு (Farmers welcome)

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் கூறுகையில், இந்த ஆண்டு, பருவம் மாறி பெய்த மழை, கொரோனா நெருக்கடி, அடுத்தடுத்து தாக்கியப் புயல்கள் என பல வகைகளில் பாதிக்கப்பட்டிருந்த எங்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

கடன் வாங்கி அறுவடை செய்து பல லட்சம் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், இது அரசு எடுத்துள்ள சரியான, தகுந்த நடவடிக்கை. ஆக பயிர்க்கடன் வாங்கி சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு யோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதன் மூலம் பல மாதங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் படிக்க...

முள்ளங்கி சாகுபடியில் கூடுதல் வருமானம் ஈட்ட சிம்பிள் டிப்ஸ்!

நீங்க டிகிரி முடிச்ச பெண்ணா? அப்படினா உங்களுக்கு ரூ.50,000!

நெல்லுக்கு எவ்வளவு நீர் தேவை? தெரியுமா உங்களுக்கு!

 

English Summary: Government of Tamil Nadu waives Rs 12,000 crore agricultural crop loan
Published on: 05 February 2021, 01:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now