மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 August, 2022 3:08 PM IST
Govt 50% subsidy for weed removal in agricultural fallow lands

வேளாண் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றி சாகுபடிக்கு கொண்டு வருவதன் மூலம் சாகுபடி பரப்பு மற்றும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 510 ஏக்கர் அளவில் இரண்டு ஆண்டுகளாக உள்ள தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றி சாகுபடிக்கு கொண்டு வருவதற்காக 50 சதவீத மானியம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிருஷ்ண பேரி, பூவநாதபுரம், துலக்கப்பட்டி, அனுப்பன்குளம், சின்னம்பட்டி, ஜமீன் சல்வார் பட்டி, கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, குமிழம் குளம், கொத்தனேரி சித்தம நாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்துக்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கிராமங்களில் இரண்டு வருடங்களுக்கு மேல் தரிசாக உள்ள நிலங்களில் உள்ள புதர்களை அகற்ற அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு ஒரு எக்டர் பரப்பிற்கு 50% மானியம் வழங்கப்படுகிறது.

இவ்வரிய வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்தி தங்களது தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றிட சிவகாசி, வேளாண்மை உதவி இயக்குநர் ரவி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

தமிழகம்: 23 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம்: SC தடையை மீறி அதிகரிக்கும் ஆன்லைன் பட்டாசு விற்பனை விளம்பரம்

English Summary: Govt 50% subsidy for weed removal in agricultural fallow lands
Published on: 29 August 2022, 03:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now