15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 2 January, 2021 7:55 AM IST
Harvesting Machine with Tractor - Arrange to Offer Low Rent!

தமிழகம் முழுவதும் நெல், சோளம், எள், ராகி ஆகியவற்றின் அறுவடை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதிக செலவீனத்தைப் போக்க ஏதுவாக வேளாண் துறை சார்பில் குறைந்த வாடகையில் டிராக்டருடன் இணைந்த அறுவடை இயந்திரம் (Tractor cum Harvesting Machine) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது பரவலாக சோளம், எள், ராகி, நெல் அறுவடைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கூலியாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிக செலவினத்தை கணக்கில்கொண்டு, டிராக்டர் உடன் இணைந்த சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம் வேளாண்மை பொறியியல் துறையின் (Agriculture Engineering Department) விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படுகிறது.

அறுவடைத்திறன் (Harvesting Capacity)

ஒரு நாளில் 10 முதல் 15 ஏக்கர் வரை அறுவடை செய்யும் இந்த இயந்திரம் தரையிலிருந்து ஒன்றரை அடி உயரத்தில் தடைகளை வெட்டி ஒருபுறமாக சீராக சாய்த்து போடுகிறது.

இதன் மூலம் சோளத்தட்டைகளை குறைந்த ஆட்களைக் கொண்டு எளிதாகக் கட்டி அடுக்கி வைக்க முடியும். இருப்பினும் சோளத்தட்டின் அடர்த்திக்கு ஏற்ப அறுவடை செய்யும் நேரம், அதிகமாகவோ, குறைவாகவே ஆக வாய்ப்பு உள்ளது.

வாடகை (Rent)

ஒரு மணி நேரத்திற்கு ரூ.340/- ரூபாய் என்ற குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

யாரை அணுகுவது (Whom to approach)

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களிலும், இந்த கருவியினை முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு:

பிரிட்டோராஜ் 

வேளாண் பொறியாளர்

9944450552 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

லட்சாதிபதி ஆகனுமா? இந்த அஞ்சலகத் திட்டத்தில் சேருங்க!

கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்- அசத்தலான அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள்!

குளிரில் உறைந்து வீணாகும் பயிர்களை பாதுகாக்கிறது பசுவின் சிறுநீர்! ஆய்வில் தகவல்!

English Summary: Harvesting Machine with Tractor - Arrange to Offer Low Rent!
Published on: 02 January 2021, 07:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now