Farm Info

Friday, 24 December 2021 07:48 PM , by: Elavarse Sivakumar

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும்பனி நிலவும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடும் பனி (Heavy snow)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்து கடும் குளிர் மற்றும் பனி நிலவி வருகிறது. வெப்பநிலையும் இயல்பை விடக் குறைவாகவே உள்ளது. காலை நேரங்களில் வாட்டி வதைக்கும் பனிமூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியேச் செல்ல நேர்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

வறண்ட வானிலை (Dry weather)

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.

மழை (Rain)

27, 28-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்றும், நாளையும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாகவேக் காணப்படும்.

லேசான பனிமூட்டம்

மேலும் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை (Chennai)

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனி மூட்டமும் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

PKVY: விவசாயிகளுக்கு ரூ.50,000 அரசு உதவி!

மாணவர் கடன் அட்டை திட்டம்: 1,36,217 மாணவர்களுக்கு 2041 கோடிகள் வழங்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)