மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 October, 2020 10:02 AM IST

வேலூரில், இயற்கை முறையில் விளைவித்த விளைபொருட்களை நுகர்வோரின் வீடுகளுக்கேக் கொண்டுசென்று, நேரடியாக விற்பனை செய்யும் பணிகளை இயற்கை சான்றிதழ் பெற்ற உழவர் சங்கம் தொடங்கியுள்ளது.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த இயற்கை சான்றிதழ் பெற்ற உழவர் சங்கத்தின் தலைவராக கோ.புருஷோத்தமன், துணைத் தலைவராக எஸ்.எம்.கனகசபாபதி, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சங்கத்தின் நோக்கம் (Target)

இயற்கை விவசாயம் செய்யும் உழவர்களுக்கு இந்திய அரசின் பிஜிஎஸ் இயற்கை சான்றிதழ்களை பெற்றுத் தருவது, இயற்கை வேளாண்மையை மேலும் மேம்படுத்துவது, கூடுதல் விலையில் விளைபொருள்களை விற்பனை செய்ய வழிகாட்டுவது, ஏக்கருக்கு ரூ.10ஆயிரம் அரசு மானியம் பெறுவது, மண்ணின் அங்ககக் கனிம வளத்தை ஏற்கெனவே இருந்தபடி 12 சதவிதத்துக்கு உயர்த்துவது ஆகியவை இந்த சங்கத்தின் நோக்கங்கள் ஆகும்.
இதுதவிர, இயற்கை விவசாயிகளின் விளை பொருள்களை பெற்று நுகர்வோர் இல்லங்களுக்கு ஆட்டோக்கள் மூலம் நேரடியாக விற்பனை செய்யவும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

9894784863 என்ற அலைபேசி மூலம் நுகர்வோர் தொடர்புகொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த உழவர் சங்கத்தின் இந்த முயற்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் படிக்க...

வேம்பு நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.18,000மானியம்- விவசாயிகளுக்கு வாய்ப்பு!

காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை - ராமநாதபுரம் விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Home-grown natural agro-products - New initiative of the Farmers Association!
Published on: 04 October 2020, 09:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now