மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 September, 2020 11:23 AM IST

பொதுமக்களிடம் வீட்டுத் தோட்டம் மற்றும் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில், நீலகிரி தோட்டக் கலைத்துறை சார்பில் மலிவு விலையில் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுக்க வளரக்கூடிய காய்கறிகளில் ஒன்றான பெர்னில் எனப்படும் சாதாரண அவரை (perennial beans) விதையைக் களிமண் மற்றும் இயற்கை உரம் கலந்து விதைப் பந்துகளாக (Seed Balls) உருவாக்கி 2 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த முயற்சி தொடங்கியதை அடுத்த பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டும் விதை பந்துகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாகத் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, இந்த ஆண்டும் 15 ஆயிரம் அவரை விதைப் பந்துகளை உற்பத்தி செய்யத் தோட்டக்கலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து உதகை அரசு தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், வீட்டின் சிறிய இடத்தில் கூட மண் சட்டிகளில் காய்கறி விதைப் பந்துகளை வைத்துப் பயிர் செய்து காய்கறிகளை விளைவிக்கலாம். ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் மக்கும் குப்பை, மாட்டுச்சாணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆரோக்கியமான காய்கறிகளை உண்ணலாம்.

 

மக்கள் தங்கள் வீடுகளில் காய்கறிகளை இயற்கையாக வளர்த்துச் சாப்பிடும் போது இயற்கை விவசாயத்தின் நன்மைகளையும் அவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்

இயற்கை விவசாயம் செய்ய விரும்புவோர் கேட்டுக் கொண்டால் தக்காளி, வெண்டை, கத்தரி ஆகியவற்றின் விதைப் பந்துகளைத் தயாரித்துக் கொடுப்போம், பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் மாவட்டத்தில் 4 இடங்களில் விதைப் பந்தினை விற்பனைக்கு வைத்துள்ளோம். மக்களின் ஆதரவைப் பொறுத்து உற்பத்தியை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

வீடுகளில், தொட்டிகளில் வளர்த்து இயற்கை காய்கறிகளை பயிர் செய்ய விரும்புவோர் 94864 12544 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு விதைகளைப் பெறலாம் என்று தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

வரும் நாட்களில் காய்கறி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு!

பால் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்

ரசாயன கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றம் - விவசாயிகள் கவலை

English Summary: Horticulture Department selling inexpensive seed balls at cost of Rs.2 to promoto kitchen gardens
Published on: 08 September 2020, 11:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now