மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 May, 2020 5:36 PM IST

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், மத்திய அரசு வேளாண்துறைக்காக 2 லட்சம் கோடி ரூபாய், கொரோனா சிறப்பு நிதி தொகுப்பின் கீழ் ஒதுக்கியுள்ளது. இந்த வேளாண் நிதியை பெற்றுப் பயனடைய 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படு உள்ளது.

நாடுமுழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முற்றிலும் முடங்கியுள்ள பொருளாதார மந்தநிலையைச் சீராக்க கொரோனா சிறப்பு நிதித் தொகுப்பாக 20 லட்சம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில், வேளாண் துறைக்காக மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வேளாண் நிதியை அதிக விவசாயிகள் பெற்றுப் பயனடையும் வகையில், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா(PM Kisan Samman Nidhi Yojana)எனப்படும் திட்டத்தீன் கீழ் 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு (KCC) வழங்கப்படவுள்ளது. இந்த கடன் அட்டை மூலம் விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடன் குறைந்த வட்டியில் பெற முடியும். முறையாக தவணை செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-Kisan) என்ற திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு மூன்று தவணையாக இந்த பணம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை சுமார் 9.13 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இணைவது எவ்வாறு?

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi) திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு திறந்துள்ள விவசாயிகள் மட்டும் தான் கிசான் கடன் அட்டை திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். நீங்களும் விவசாயியாக இருந்து இந்த விவசாயக் கடன் அட்டை இல்லை என்றால் இப்போதே கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றிப் பலனடையுங்கள்.

  • PM Kisan Samman Nidhi யின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://pmkisan.gov.in/ -க்கு செல்லவும்.

  • கிசான் கடன் அட்டைக்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.

  • உங்கள் நிலத்தின் ஆவணங்கள் மற்றும் பயிர் குறித்த விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும்.

  • பின் உங்கள் அருகில் உள்ள வங்கிக்குச் சென்று அதனை ஒப்படைக்கவும்

கிசான் அட்டை பெறுவதற்கான நிபந்தனைகள் என்ன?

  • விண்ணப்பதாரர் விவசாயத்துடன் தொடர்புடையவராக இருக்க வேண்டும்.

  • 18 வயது முதல் 75வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

  • 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் துணை விண்ணப்பதாரர் கட்டாயம் அவசியம்.

  • மற்றவரின் நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாய நபர் கூட இந்த கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

எந்த எந்த வங்கிகள் கிசான் கடன் அட்டைகளை வழங்குகின்றன?

நபார்ட்(NABARD), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank), பேங்க் ஆப் இந்தியா (Bank of India), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) மற்றும் ஐ.டி.பி.ஐ (IDBI) ஆகிய வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டை வழங்குகின்றன.

கிசான் கிரெடிட் கார்டுக்கு தேவையான ஆவணங்கள்

  • முழுமையாக நிரப்பப்பட்ட கிசான் கடன் அட்டைக்கான (KCC) விண்ணப்ப படிவம்

  • ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆதாரம்.

  • நில ஆவணங்கள்.

  • இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்

  • வங்கிகள் கோரும் பிற ஆவணங்கள்.

கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

 

  • எஸ்பிஐ(SBI), ஆக்சிஸ் வங்கி(Axis Bank), பிஎன்பி(PNB), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) அதாவது எந்த வங்கியில் விண்ணப்பிக்க நினைக்கிறீர்களோ அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லுங்கள்.

  • கிசான் கடன் அட்டை குறித்து தேடுங்கள்..

  • கிசான் கடன் அட்டை (KCC)-க்கு விண்ணப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்க.

  • கிசான் கடன் அட்டை (KCC)படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யுங்கள்.

  • பூர்த்தி செய்த படிவத்தை பதிவிறக்கம் செய்து, அருகிலுள்ள வங்கியின் கிளைக்குச் சென்று சமர்ப்பிக்கவும்.

  • கடன் அட்டை வழங்கும் அதிகாரி உங்கள் படிவத்தை மதிப்பாய்வு செய்து அவர் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றவும்.

  • கடன் அட்டை ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கிசான் கிரெடிட் கார்டு உங்கள் இல்லம் தேடி வரும் பெற்றுக்கொள்ளுங்கள்.

English Summary: How Farmers can get Kisan Credit Card under PM- kisan Scheme How to apply
Published on: 31 May 2020, 05:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now