பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 29 December, 2021 7:44 AM IST

தென்னை சாகுபடியில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும் நுண்ணூட்டச் சத்துக்களை அளிப்பது எப்படி என்பதை விவசாயிகள் தெளிவாகத் தெரிந்துகொண்டால் போதும். அதிக மகசூல் நிச்சயம்  சாத்தியமாகும்.

அதிகரிக்கும் தென்னை சாகுபடி (Increasing coconut cultivation)

தமிழகத்தைப் பொறுத்தவரை, தென்னை சாகுபடி அதிகரித்த வண்ணம் உள்ளது. அதற்கு ஏற்றவாறு, ஆட்கள் கிடைப்பதில் பெரும் பற்றாகுக்குறை நிலவுகிறது.

குறிப்பாகத் தற்போது ஆட்கள் பற்றாக்குறை பராமரிப்பு அதிகளவில் இருப்பதால் அதிக அளவில் நிலங்கள் வைத்து இருக்கும் விவசாயிகள் மரப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்வம் இல்லை (Not interested)

தென்னை மரங்களுக்கு தழைச்சத்து மணிசத்து மற்றும் சாம்பல் சத்துக்ககளை வழக்கம் போல விவசாயிகள் இட்டு வருகின்றனர். ஆனால் நுண்ணூட்ட சத்துகளை இடுவதில் ஆர்வம் இல்லாத நிலை தான் காணப்படுகிறது.

நுண்ணூட்டம்

இதன் விளைவாக ஒல்லி காய்களும், தேரைக்காய்களும் சரிவர விளையாத (பருப்பு) காய்கள் தான் கிடைக்கின்றன.இதனைத் தவிர்க்க தென்னை நுண்ணூட்டச்சத்து ஒரு மரத்திற்கு ஆறுமாதத்திற்கு ஒரு முறை ஒரு கிலோ வீதம் தென்னை நுண்ணூட்ட சத்து இட வேண்டும். இதன் விலை 82.20 மட்டுமே.

இதில் தென்னை மரங்களுக்குத் தேவையான இரும்பு சத்து 3.80%மும், மாங்கனிஸ் 4.80%மும், துத்தநாகம் 5%மும், போரான் 1.6%மும், தாமிரம் 0.5 சதவிகிதமும் உள்ளது. தென்னை சாகுபடி அதிகம் உள்ள அனைத்து வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இந்த நுண்ணூட்ட சத்து விற்பனைக்கு உள்ளது.

எப்படி வைப்பது (How to place)

இந்த உரத்தை ஒருவருட தென்னை மரத்தின் தூரைச் சுற்றி 60 செ.மீ ஆரமுள்ள வட்டப்பாத்தி அமைத்து, ஆண்டுக்கு இரு முறை வைத்திட வேண்டும்.

வருடா வருடம் வட்டப்பாத்தியை தலா 45.செ.மீ அதிகரித்து கொண்டே போக வேண்டும்.

வட்டப்பாத்தி நுண்ணூட்ட சத்துடன் மக்கிய குப்பை/தொழு உரம் கலந்து இடவேண்டும்.

கூடுதல் வருமானம் (Extra income)

பின்னர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் இவ்வாறாக செய்தால் தரமான தேங்காய் விளைச்சல் தருவதுடன் அதிக எண்ணிக்கையிலான காய்கள் உற்பத்தியாகும். இதன்மூலம் கூடுதலாக வருமானமும் கிடைக்கும்.

தகவல்:

அக்ரி சு.சந்திரசேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புக்கோட்டை

94435 70289.

மேலும் படிக்க...

வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்!

புதிய தொழில்முனைவோருக்கு தொலை நோக்குப்பார்வை அவசியம்!

English Summary: How to Apply Micronutrients to Coconut Tree?
Published on: 29 December 2021, 07:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now