நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 February, 2022 8:48 AM IST
How to control rice earhead bug

நெற்பயிரில் கதிர்நாவாய் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் கல்யாண சுந்தரபுரம் கிராமத்தில் நெற்பயிரை ஆய்வு செய்யும் பொழுது கதிர் நாவாய் பூச்சி தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கதிர் நாவாய் பூச்சி தாக்கப்பட்ட வயல்களில் உள்ள கதிர்கள் அனைத்தும் பதராக இருந்தது. கதிர் நாவாய் பூச்சி வகைகள் சாறு உறிஞ்சும் இனத்தை சேர்ந்தது.

பயிர்களுக்கு சேதம் (Crop Damage)

நெற்பயிரில் பால் பிடிக்கும் தருணத்தில் இந்த பூச்சிகளின் தாக்குதல் தென்படும். கூர்மையான வாய் உறுப்பை வைத்து நெற்பயிரில் உள்ள பால்கள் அனைத்தையும் உறிஞ்சி மணியில் சிறு சிறு புள்ளிகள் தென்படுவதை பார்க்க முடியும். நெல் வயலில் இந்த பூச்சிகள் இருக்கும் போது ஒருவித துர்நாற்றத்தை உணர முடியும்.

இந்த பூச்சி 250 முதல் 300 முட்டைகளை இடும் தன்மையுடையது. முட்டையிலிருந்து 7 நாட்களுக்குள் நாவாய்ப் பூச்சிகள் வெளிவரும். வெளிவந்த நாவாய் பூச்சிகள் 5 நிலைகளாக உருமாறி முதிர்ந்த நாவாய்ப் பூச்சிகள் அனைத்துமே பயிருக்கு சேதத்தை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் யுக்திகள் (Control methods)

நாவாய்ப் பூச்சிகளை இயற்கையாக கவர்ந்து அழிக்க ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம். வசம்பு தூளை வயலில் தூவுவதன் மூலம் நாவாய்ப்பூச்சிகளை தவிர்க்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

இயற்கை விவசாயத்தில் நஞ்சில்லாப் பழங்களை சாகுபடி செய்யும் மதுரை விவசாயி!

இ-நாம் திட்டத்தால் நெல் வரத்து அதிகரிப்பு: விவசாயிகளுக்கும் கூடுதல் பலன்!

English Summary: How to control rice earhead bug attack on paddy?
Published on: 24 February 2022, 08:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now