மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 January, 2021 9:06 AM IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தூத்துக்குடியில் நடத்தப்பட்ட பயறு வகைப் பயிர்களில் தரமான விதை உற்பத்திக்கான தொழில்நுட்பப் பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பயிர் இனப் பெருக்கம் மற்றும் மரபியல் பயறு வகைத்துறையில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம், எட்டயபுரம் தாலுக்காவில் உள்ள சிந்தலக்கரை ஊராட்சியில் இந்த பயிற்சியை நடத்தியது.

நோக்கம் (Concept)

விவசாயிகளுக்கு பயறு வகைப்பயிர்களில் தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பப் பயிற்சியினை அளித்து, விதை மாற்று விகிதத்தை அதிகப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

 

லாபம் ஈட்ட யோசனை (The idea of making a profit)

இதில் விதை மைய இயக்குநர் முனைவர். செ. சுந்தரேஸ்வரர் பங்கேற்று, தரமான விதை உற்பத்தியின் மூலம், விவசாயிகள் லாபம் ஈட்டும் முறையையும், விதை உற்பத்தியின் மூலம் தானிய உற்பத்தியைக் காட்டிலும் லாபம் ஈட்டுவது குறித்தும் விளக்கினார்.

மேலும் பயறு வகை விதை உற்பத்தியில் இனத் தூய்மைப் பராமரிப்பின் முக்கியத்துவம் மற்றும் பராமரிப்பு வழிமுறைகள், தரமான விதைகளின் முக்கியத்துவம் மற்றும் பயறு வகைப் பயிர்களின் விதி நேர்த்தி, பயறு வகைப் பயர்களில் மேற்கொள்ள வேண்டிய உழவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றியும் வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.

மேலும் படிக்க...

உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!

English Summary: How to make quality seed production in pulses?
Published on: 10 January 2021, 09:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now