சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 15 September, 2021 11:22 AM IST
Manage Water in paddy

நெற்பயிருக்கு 1150 முதல் 1200 மி.மீ நீர் தேவைப்படும். அதை விட அதிகமாக நீர் பாய்ச்சினால் ஆவியாகும். மண்ணில் ஊடுருவிச் செல்லும். சிக்கனமாக நீர் பாய்ச்சி அதிக மகசூல் பெறுவதே லாபமான விவசாயம் என்கின்றனர் தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லுாரி உதவி பேராசிரியர் கருணாகரன் மற்றும் டீன் வேலாயுதம்.

நாற்றாங்காலுக்கு 40 மி.மீ. நீர், நிலத்தை தயார் செய்ய 200 மி.மீ. நெற்பயிர் நட்டதிலிருந்து கதிர் பருவம் வரை 458 மி.மீ. பின்னர் பூக்கும் பருவம் வரை 417 மி.மீ. கதிர் முதிர்ச்சி அடையும் வரை 125 மி.மீ. நீரும் தேவைப்படுகிறது. ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்வதற்கு 3000 - 5000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

நாற்றாங்காலில் நீர் நிர்வாகம்

விதைத்த 18-24 மணி நேரத்திற்குள் தண்ணீரை வடித்து விதை முளைக்க வழி செய்ய வேண்டும். குண்டு குழிகளில் தேங்கி நிற்காதவாறு பாத்தி அமைப்பு இருக்க வேண்டும். விதைத்த மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீர் கட்டுவது, தண்ணீர் தேங்காதவாறு இருக்க வேண்டும். ஐந்தாவது நாளிலிருந்து நாற்றின் வளர்ச்சிக்கேற்ப நீரின் உயரத்தை அதிகரிக்கலாம். அதிக பட்சமாக ஒரு அங்குல ஆழ நீர் கட்டுவது சிறந்தது.

நடவு வயல் நீர் நிர்வாகம்

சேற்றுழவும், உழுது நிலத்தை சமன் செய்வதும் நீரின் தேவையைக் குறைக்கின்றன. இரும்புச் சக்கரக் கலப்பை மூலம் சேற்றுழவு செய்யும்போது நீர் மண்ணினுள் ஊடுருவி வீணாவது 20 சதவீதம் தடுக்கப்படுகிறது. வயலில் மடக்கி உழப்பட்ட பசுந்தாள் உரம் நல்ல முறையில் மட்குவதற்கு ஒரு அங்குல நீர் நிறுத்தவேண்டும். குறைவான நார்த்தன்மையுடைய சணப்பை, தக்கைப்பூண்டுக்கு 7 நாட்களும் அதிக நார்த்தன்மையுடைய கொளுஞ்சிக்கு 15 நாட்களும் நீர்தேவை. அதன்பின்பே நடவு செய்யவேண்டும்.

நடவு செய்யும்போது

தண்ணீரின் அளவு சேறும் சகதியுமாய் இருந்தால் தான் சரியான ஆழத்தில் நடுவதற்கும் அதிக துார் பிடிப்பதற்கும் உதவும். நட்ட ஒரு வாரத்திற்கு ஒரு அங்குல நீர் தேக்கவேண்டும். இது துார் பச்சை பிடிக்கும் காலம் என்பதால் நீர் அளவு குறையக்கூடாது.

கொண்டைக் கதிர் பருவத்திற்கு பின் 2 அங்குலத்திற்கு மேல் ஆழமாக நீர் பாய்ச்சினால் வேரின் திறன் பாதிக்கப்பட்டு அழுகி விடும். கதிர் சரியாக வெளிவராமலும் வந்த கதிர்களில் நெல் மணிகள் சரிவர முதிர்ச்சியடையாமலும் வீணாகி விடும். நீர் தேங்கினால் வடிகால் அமைத்து நீர் மறைந்தபின் கட்ட வேண்டும். அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பாக கடைசி நீர் கட்ட வேண்டும்.

Also Read | பெண் விவசாயி வாங்கிய வங்கிக்கடனை அடைத்த நீதிபதி!

ஒவ்வொரு வயலும் 25 முதல் 50 சென்ட் உள்ளதாக அமைக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட வயல்களின் நான்கு புறமும் வரப்பிற்கு உட்புறமாக 30 - 45 செ.மீ., இடைவெளியில் கை வரப்பு அமைத்து தண்ணீர் தேவையை குறைக்க வேண்டும். நீர்பிடிப்பு உள்ள நிலப் பகுதிகளில் வயலின் மத்தியிலும், குறுக்காகவும் 2 அடி ஆழத்திற்கு 1.5 அடி அகலத்திற்கு வடிகால் அமைக்கலாம்.

தொடர்புக்கு: 94891 08690

மேலும் படிக்க

நெல் தரிசில் உளுந்து சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்க கோரிக்கை!

தென்னையில் மகசூலை குறைக்கும் காண்டாமிருக வண்டு!

English Summary: How to manage water in paddy?
Published on: 15 September 2021, 11:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now