Do it with 50% Subsidy, Hydroponics Farming!
மண்ணில்லா விவசாயம், குறைந்த உற்பத்தி இடத்தில் காய்கறிகளை திறம்பட பயிரிடும் வாய்ப்பை வழங்குகிறது. இதனை ஆங்கிலத்தில் Hydroponics Farming என்கின்றனர். இம் முறையானது தோட்டக்கலையில் நல்ல லாபம் ஈட்டலாம். இதற்கு அரசின் மானியம் என்ன என்பதை பார்க்கலாம்.
அரசு மானியம்
50% சதவீத மானியத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெருநகரங்களுக்கு பின்னேற்புமானியமாக ரூ.15,000/- வழங்கப்படுகிறது.
இதன் நன்மைகள்
மண்ணில்லுள்ள பூச்சி மற்றும் நோய் பாதிப்பின் காரணிகள் இம்முறையில் தாக்குவது மிக குறைவு
களைகள் இம்முறையில் அறவே கிடையாது. எனவே தொழில் செலவு குறைவு.
என்னன்ன பயிர்கள் செய்யலாம்?
- அனைத்து வகையான கீரைகள், தக்காளி மற்றும் வெள்ளரியை, இம்முறை மூலம் பயிரிடலாம்.
- ஹைட்ரோபோனிக்ஸ் அமைப்பதற்கான வரையறைகள்
- NFT தடங்கள் (NFT Channel) யு.பி.வி.சி, 100*50 மிமீ, 32 அடி, மூடிய மற்றும் திறந்த விளிப்பு மூடி
- தாங்கும் அமைப்பு - துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel, Dismantle, Easy To assemble) 4*2 அடி, 1 அங்குளம் விட்டம்
- குழாய் இணைப்புகள் - யு.பி.வி.சி, 1 அங்குலம் விட்டம், T & L bend, inlets & outlets
- 40 வாட் நீரில் மூழ்கிய மோட்டார்
- <0.5 மின்கடத்து திறன், பெர்லைட் கலவை
- மூன்று மாதத்திற்கான ஊட்டச்சத்து
- வலை அமைப்பிலான தொட்டி (Planter Pots) - 2 அங்குலம்,
- கார அமில நிறங்காட்டி
- 25 லிட்டர் தொட்டி
- விதைகள்
மேலும் படிக்க:
கிணறுகளின் நீர்மட்டம் அறிய ஜல்தூத் செயலி அறிமுகம்!
தமிழகம்: நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்களை கோரும் விவசாயிகள்!