நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 July, 2022 10:34 AM IST

ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் சார்பில் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது. இதனைப் பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அமெரிக்கா போன்ற நாடுகளில், இந்திய விளை பொருட்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விவசாயியா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு உறுதி. இந்தப் பரிசை தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் அளிக்கிறது.

தகுதி

வேளாண், தோட்டக்கலை பயிர்கள் எதுவாக இருந்தாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம் ரூ.100. விண்ணப்பத்தை மாவட்ட கண்காணிப்பு குழு கமிட்டி பரிந்துரை செய்து மாநில கமிட்டிக்கு அனுப்பும். எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு எடையில் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, அதன் மதிப்பு உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.

தொடர்புக்கு

தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிக்கு ஏற்றுமதியாளர் விருதும் ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்படும் என விற்பனை வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த வட்டார வேளாண், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

காணாமல் போன 1.50லட்சம் ரூபாய் பேனா- வலைவீசும் போலீஸ்!

சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!

English Summary: If you do this, a reward of Rs. 2 lakh will be given to the farmers!
Published on: 07 July 2022, 10:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now