Farm Info

Tuesday, 27 July 2021 08:08 PM , by: R. Balakrishnan

Credit : Dinamani

கோடை வெப்பம் தணிந்து பருவமழை ஆரம்பிக்கும் காலம் ஆடி மாதம் என்பதால் முன்னோர்கள் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்றனர். ஜூனில் துவங்கும் தென் மேற்கு பருவ மழையால் (South west monsoon) பூமி குளிர்ந்து ஈரப்பதத்துடன் மண், பாசன வசதிக்கு ஏற்ப தயாராக இருக்கும். இதன்படி ஆடியில் விதைத்து தையில் அறுவடை (Harvest) செய்வர்.

அதிக மகசூல்

ஆடி பெருக்கு அன்று தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் நாற்று நடுவர். விதைப்பு செய்வது வழக்கம். ஆடிப்பட்டம் மேற்கொள்ளும் விவசாயிகள் தரமான விதைகளை தேர்வு செய்து விதை நேர்த்தி செய்தால் மட்டுமே அதிக மகசூல் (High Yield) பெற்று நல்ல லாபம் பெறலாம்.

விவசாயத்திற்கு விதையே ஆதாரம். விதையின் சுத்தத்தன்மை, ஈரப்பதம் (Moiture), முளைப்புத்திறன் ஆகியவற்றை நல்ல முறையில் பராமரிப்பதால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும்.

விதை பரிசோதனை

விவசாயிகள் விதைகளின் தரம் குறித்து பரிசோதனை செய்ய மாவட்ட விதைப்பரிசோதனை நிலையத்தில் ரூ.30 கட்டணம் செலுத்தி விதை முளைப்புத்திறனை அறிந்து கொள்ளலாம் என மதுரை விதை பரிசோதனை அலுவலர் சிங்காரலீனா தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு:
99528 88963

மேலும் படிக்க

கால்நடைகளுக்கு மாலையிலும் சிகிச்சை அளிக்க வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!

மழைக்காலத்தில் துள்ளுமாரி நோயிலிருந்து செம்மறியாடுகளை பாதுகாக்க என்ன செய்யலாம்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)