Farm Info

Tuesday, 26 October 2021 11:35 AM , by: Aruljothe Alagar

Increase in demand for pulses! But the farmers are upset!

இந்த நாட்களில் மகாராஷ்டிராவின் மாவட்டங்களில் உளுந்து மற்றும் சோயாபீன் வரத்து அதிகரித்துள்ளது. உளுந்து பயிர் பல மாநிலங்களில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. பண்டிகைகள் காரணமாக இரண்டிற்கும் தேவை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் சிலர் கூறுகின்றனர். வரும் காலங்களில் மேலும் வரத்து அதிகரிக்கலாம்.

சில வாரங்களுக்கு முன்பு, சில மாநிலங்களில் சோயாபீன், உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பருவமழை பெய்த்ததால் கடும் அவதிக்குள்ளாகினர். தற்போது இரண்டு பயிர்களின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில், தற்போது சோயாபீன் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 4000 முதல் 5000 வரை உள்ளது, இது இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட பாதியாக உள்ளது.

மாநிலம் முழுவதும் உளுந்தின் தேவை அதிகரித்து வருகிறது. தற்போது, ​​நல்ல தரமான உளுந்து ஒரு குவிண்டால் ரூ. 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை விலை பேசப்படுகிறது. அதே நேரத்தில், பல்வேறு சந்தைகளில் அதன் விலை 5000 முதல் 6,500 ரூபாய் வரை இருக்கும். ஏனெனில் சந்தைக்கு வரத்து வேகமாக இருக்கும். ஆனால், சில்லரை சந்தையில் ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ரூ.110 முதல் ரூ.120 வரை கிடைக்கிறது.

பயிர் சேதமடைந்தது

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சோயாபீனுடன், உளுந்து பயிரிலும் அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மழையால் கெட்டுப்போன உளுந்தின் விலை குறைந்தது. அதனால் அதே நல்ல தரமான உளுந்துக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. விளைச்சல் இல்லாததால், சில மாதங்களுக்குப் பிறகு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என, வேளாண் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அதனால் தான் விலை குறைந்துள்ளதா?

இதற்கிடையில், 12 லட்சம் மெட்ரிக் டன் சோயாமீல் (சோயாபீன் கேக்) இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதும் சோயாபீன் விலை வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது. விவசாய தலைவர் அஜித் நாவலே கூறுகையில், சோயாமீல் இறக்குமதி செய்ய முடிவு செய்ததால், புதிய பயிருக்கு விலை கிடைக்கவில்லை.

நம் நாட்டில் போதிய உற்பத்தி இருக்கும்போது, ​​விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஏன் இறக்குமதி செய்யப்பட்டது. இப்போது நிலவரத்தைப் பார்க்கும்போது, ​​இந்த ஆண்டு சோயாபீன் விலை குவிண்டாலுக்கு மூவாயிரம் ரூபாய் குறையும் என்று தெரிகிறது. அதேசமயம், இந்த இறக்குமதிக்கு முன், சோயாபீன் விலை குவிண்டாலுக்கு 10,000 ரூபாயாக இருந்தது. தற்போது சோயாபீன் ஒரு குவிண்டாலுக்கு 3950 ரூபாயாக உள்ளது.

சோயாமீல் இறக்குமதி முடிவை எதிர்த்து, ஆகஸ்ட் 26 ஆம் தேதியே, மகாராஷ்டிர விவசாய அமைச்சர் தாதாஜி பூஸ், மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்த முடிவுக்கு பிறகு சோயாபீன் விலை குவிண்டாலுக்கு 2000 முதல் 2500 வரை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

மேலும் படிக்க:

வீட்டுத் தோட்டத்திற்கு ஏற்ற சிறகு அவரைக்காய்! தென்னையில் வாடல் நோயைக் கட்டுப்படுத்துமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)