நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 July, 2020 9:05 AM IST
credit: Venom

கடந்த 20 ஆண்டுகளில், தென்மேற்கு பருவமழைக் காலத்தில், பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருந்திருப்பதும், பாம்புக்கடிக்கு 12 லட்சம் இந்தியர்கள் பரிதாபமாக பலியாகியிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகளாவிய சுற்றுச்சூழலியல் தொடர்பாக இ-லைஃப் பத்திரிகை சார்பில் (e-Life Journal) அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கடந்த 2000-வது ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 12 லட்சம் இந்தியர்கள் பாம்புக்கடிக்கு தங்கள் இன்னுயிரை இழந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 முதல் 69-க்கு இடைப்பட்ட வயதுடையவர்கள். அதிலும் குறிப்பாக பாதிக்கும் மேற்பட்ட பாம்புக்கடி சம்பவங்கள், தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டர்மர் வரையிலான மாதங்களில் நிகழ்ந்துள்ளன.

பலிகொண்ட பாம்புகள் (Snake bites)

அவர்களில் பலருக்கு காலிலேயே, பாம்புக் கடித்துள்ளது. குறிப்பாக நாகப்பாம்பு, கட்டுவிரியன் போன்ற அதிக விஷம் கொண்ட பாம்புகளின் கடிக்கு ஆளாகியே இவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

சிகிச்சைக் கிடைக்கவில்லை

பலியானவர்களில் பெரும்பாலானோருக்கு, முறையான சிகிச்சைக் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில், ஆரம்ப சுகாதார மையங்கள் அருகில் இல்லாததும், மரணத்திற்கு மற்றுமொரு காரணமாக அமைந்திருக்கிறது.

 

credit: Researchgate

2001 முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, உத்தரப்பிரதேசம், தெலங்கானாவை உள்ளடக்கிய ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 70 சதவீத உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இதையடுத்து ஆசியா, ஐரோப்பா மற்றும் லத்தீன்-அமெரிக்காவைச் சேர்ந்த 44 நாடுகளில் 162 இடங்களில் யுனெஸ்கோவின் சர்வதேச உயிரியல் பூங்காக்களை (UNESCO Global Geopark)அமைக்க யுனெனஸ்கோ செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் அதிகரிப்பு (Movement Raising)

எனினும் இந்த ஆய்வில், தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிகபட்சமான பாம்புக்கடி மரணங்கள் நிகழ்ந்திருப்பது உறுதியாகியிருப்பதால், தற்போதைய அந்தப் பருவமழைக்காலத்தில், விவசாயிகள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

பாம்பின் இயல்பு (Snakes nature)

ஏனெனில் மழைக்காலங்களில் பாம்புகள் வசிக்கும் புற்றுகளுக்குள், தண்ணீர் செல்வதால், அவற்றின் வாழ்விடம் பாதிக்கப்படுகிறது.

தங்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்படுவதால், தன் வசிப்பிடத்தை விட்டு வயல்வெளிக்கு பாம்புகள் வர நேர்கிறது. எனவே இந்த காலகட்டத்தில் விவசாயிகள் கூடுதல் கவனத்துடனும், விழிப்புடனும் இருக்குமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மேலும் படிக்க...

புலிகள் கணக்கெடுப்பில் நவீன யுக்தி - இந்தியா கின்னஸ் சாதனை!!

மனிதத் தோற்றத்தில் காட்சியளிக்கும் டிரிக்கர் மீன்கள்- வால்துடுப்பால் நீந்துவது அழகு!!

 

English Summary: Increase the movement of snakes during the rainy season - Attention farmers
Published on: 15 July 2020, 09:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now